சிவாஜி மாதிரியே இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு!.. கவுண்டமணி பெயர் வந்தது இப்படியா?!..

சில திரைப்படங்களில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் கவுண்டமணி. அதோடு, அடுத்து அவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திலும் கவுண்டமணிக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.

அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். கவுண்டமணியோடு செந்திலும் இணைந்து இருவரும் பல திரைப்படங்களிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

சுமார் 20 வருடங்கள் கவுண்டமணி ரசிகர்களை சிரிக்க வைத்தார். 90களில் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ போலவே கவுண்டமணி மாறினார். தான் நடிக்கும் படங்களில் சண்டைக்காட்சி மற்றும் டூயட் எல்லாம் கேட்டார். கவுண்டமணிக்கு ஜோடியாக சில நடிகைகளும் நடித்தார்கள்.

இதையும் படிங்க : கவுண்டமணி கோபப்பட்டு கத்திட்டாரு!.. நாட்டாமை பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!.. பகிரும் ரவிக்குமார்…

கவுண்டமணியின் சொந்த பெயர் சுப்பிரமணி. கோவைக்கு அருகே உள்ள பொள்ளாச்சியை சேர்ந்ந்தவர். 15 வயது முதலே நாடகத்தில் நடித்து வந்தவர். இவருடன் செந்திலும் சில நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. ஒரு நாடகத்தில் கவுண்டராக நடித்தார் சுப்பிரமணி. அப்போது அவரின் நடிப்பை பாராட்டி பேசிய ஒருவர் ‘ஒரு கவுண்டர் எப்படி இருப்பாரோ அதுபோலவே நடித்திருக்கிறார். இவரை இனிமேல் கவுண்ட மணி என்றும் அழைக்கலாம்’ என பாராட்டி இருக்கிறார். அதன்பின்னரே அவர் கவுண்டமணி என அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

goundamani

ஒருபக்கம், நாடகத்தில் எதிரே நடிக்கும் நடிகர் என்ன வசனம் பேசினாலும் அதற்கு அவர் ஒரு கவுண்டர் கொடுப்பார் என்பதால் கவுண்ட்டர் மணி எனவும் இவரை சிலர் அழைத்தனர். பதினாறு வயதினிலே படம் உருவானபோது அவரின் பெயரை டைட்டில் கார்டில் போட அப்படத்தில் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் கேட்டபோது ‘கவுண்ட்டர் மணி’ என சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், அது சரியாக காதில் விழாமல் கவுண்டமணி என எழுதி கொடுத்துவிட்டார் பாக்கியராஜ். அதன்பின் கவுண்டமணி என்றே எல்லோரும் அவரை அழைக்க துவங்கினார். அதுவே அவரின் பெயராகவும் மாறிவிட்டது. மொத்தத்தில் நாடகத்தில் என்ன பட்டப்பெயர் கிடைத்ததோ அதுவே கவுண்டமணிக்கு காலத்திற்கும் நீடித்துவிட்டது. சிவாஜி நாடகத்தில் நடித்ததால் சிவாஜி கணேசன் என பெயர் வந்தது போல கவுண்டராக நடித்து கவுண்டமணி ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

Related Articles

Next Story