வேறு வழியில்லாமல் நிக்கோலை கரம்பிடிக்கும் வரலட்சுமி! பின்னணி காரணம் என்ன தெரியுமா?

Actress Varalakshmi: சோசியல் மீடியாக்களில் இப்போது வரலட்சுமி திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் தான் அதிக அளவு வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவருடைய கருத்துக்களை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது 'வரலட்சுமி என்ன பெரிய நடிகையா? நயன்தாரா திரிஷாவை போல் அவர் எந்த படத்தில் ஜொலித்திருக்கிறார்?

ஒரு நடிகைக்கு திருமணம் என்றால் ஏன் ஒட்டுமொத்த மீடியாக்களும் அவர்கள் பின்னாடி ஓடுகிறீர்கள்? ஏதோ ஒரு படத்தில் நன்றாக நடித்து விட்டார் என்பதற்காக அவரை இந்த அளவு பிரபலப்படுத்துகிறீர்களே' என தன்னுடைய ஆதங்கத்துடன் ஆரம்பித்தார் காந்தராஜ். வரலட்சுமி நிக்கோலை என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

இதையும் படிங்க: பாலாவுக்குக் கொடுத்த கடனை திருப்பி கேட்காத சூர்யா… பிரபலம் சொல்லும் பின்னணி தகவல்

அதற்கான மெஹந்தி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நிக்கோலை பொறுத்தவரைக்கும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அது மட்டும் அல்லாமல் 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.. அப்படி இருக்கும்போது வரலட்சுமி இரண்டாவது மனைவியாகத்தான் நிக்கோலை கரம் பிடிக்க இருக்கிறார. அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி காந்தராஜ் கூறியிருக்கிறார் .

வரலட்சுமி மட்டுமல்ல அந்த காலத்தில் சாவித்திரி, வைஜெயந்தி மாலா ,ஹேமா மாலினி ,ஸ்ரீதேவி போன்ற நடிகைகள் எல்லாருமே இரண்டாவது தாரமாகத்தான் தன் வாழ்க்கையை தொடங்கினார்கள். சாவித்திரியின் வரலாறு அனைவருக்குமே தெரியும். அதேபோல் வைஜயந்திமாலா பாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

பாலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது. அதுபோல ஹேமமாலினி தர்மேந்திராவை திருமணம் செய்தார். தர்மேந்திராவை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே அவருக்கு மகன்கள் இருந்தார்கள். அவருடைய மகன்களையும் ஹேமமாலினியையும் ஒன்று சேர்த்து பார்த்தால் அக்கா தம்பி என்று கூட சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஹேமமாலினி வயதிற்கு இணையாக மகன்கள் இருந்தார்கள்.

இதையும் படிங்க: கைவிட்ட சூர்யா.. காக்க வைக்கும் தனுஷ்!.. அதனாலதான் அந்த நடிகர்கிட்ட போனாரா சுதாகொங்கரா?!..

அதேபோல ஸ்ரீதேவி அழகிலும் நடிப்பிலும் தலை சிறந்தவர். அவருக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ நடிகர்கள் அவரை பெண் கேட்டு பார்த்தனர். ஆனால் எதற்குமே அவரது பெற்றோர்கள் செவி சாய்க்கவில்லை. கடைசியில் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அந்த வரிசையில் இப்போது வரலட்சுமியும் இரண்டாவது தாரமாகத்தான் நிக்கோலை கரம் பிடிக்க இருக்கிறார். இதற்கெல்லாம் ஒரே காரணம் உறவினர்களால் படும் வேதனை. அவர்கள் கொடுக்கும் டார்ச்சர் இதுதான். நடிகைகளை பொறுத்த வரைக்கும் செல்வாக்கில் எந்த குறையும் இருக்காது .ஆனால் அவர்களை சுற்றி இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் இவர்களிடம் இருந்து ஏராளமான பிரச்சனைகள் வரக்கூடும். அதனால் கிடைத்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு செட்டிலாகி விடுவோம் என அந்த நேரத்தில் யோசிக்காத அளவு இப்படி ஒரு முடிவை எடுத்து விடுகிறார்கள்.

இதையும் படிங்க: அது கெட்ட வார்த்தை கிடையாது அன்பின் வெளிப்பாடு… சமுத்திரக்கனி சொல்றதை பாருங்க..!

 

Related Articles

Next Story