Connect with us
surya

Cinema History

உங்க அப்பாவுக்கு அப்படி என்ன கோவம் என் மேல? சூர்யாவிடம் எரிந்து விழுந்த ஜோதிகா!

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடிகளான சூர்யா ஜோதிகா இருவரும் `பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்தில் நடித்து ஜோடி சேர்ந்தார்கள். அந்த படம் சூர்யாவின் சினிமா கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. இடத்தின் மூலம் அவர் ஹிட் கொடுத்து தொடர்ந்து படவாய்ப்புகள் பெற ஆரம்பித்தார்.

surya

அந்த படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் ஆகவேண்டும் என்பதற்காக ஜோதிகாவுடன் நட்பாக பழக ஆரம்பித்த சூர்யா ஜோவின் முதல் பார்வையிலும் புன்னகையிலும் சூர்யா வசீகரிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து இருவரும் ஈர்க்கப்பட்டு காதலிக்க துவங்கியுள்ளனர். காக்க காக்க படத்தில் தான் இவர்கள் உண்மையிலே காதலித்து நடித்ததாக சூர்யா பல மேடைகளில் கூறினார்.

surya1

நிஜத்தில் காதலித்ததால் என்னவோ இவர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜோடியாக பார்க்கப்பட்டனர். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த அவர்களுக்கு சிவகுமார் தடை விதித்தார். ஜோதிகாவை திருமணம் செய்யக்கூடாது என பல முட்டுக்கட்டை போட்டுள்ளார். ஆனால், சூர்யா காட்டினாள் அவரை தான் கட்டுவேன் என ஒற்றை காலில் நின்றாராம்.

surya 3

அப்போது தான் ஜோதிகா சூர்யாவிடம், உங்க அப்பா ஏன் என்னை வேண்டாமான்னு சொல்றாரு? என்ன தான் பிரச்சனை என கேட்டாராம். அதற்கு சூர்யா, சினிமாவில் நீ நடிப்பது மட்டும் தான் குறை. ஒரு நடிகையை திருமணம் செய்யக்கூடாது என்பது தான் அவர் கருத்து என கூற உடனே ஜோதிகா நான் படங்களில் நடிப்பதையே நிறுத்திக்கொள்கிறேன் என கூற பின்னர் சிவக்குமார் அரைமனத்தோடு ஒப்புக்கொண்டு திருமணம் செய்து வைத்தாராம்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top