சிவகார்த்திகேயன் அனிருத்தை கழட்டி விட இதுதான் காரணம்.! வெளியான ரகசிய தகவல்…

Published on: August 6, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது படங்களின் வரிசையில் அதிகமாக புதுமுக இயக்குனர்களுக்கு, வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்றே சொல்லலாம், அதுவும் அந்த படங்களில் நடித்து ஹிட் அடித்தும் வருகிறார்.

அந்த வகையில், அறிமுக இயக்குனர் படத்திற்கு அனிருத்தை இசையமைக்க சிவகார்த்திகேயன் கோரிக்கை வைப்பாராம். அதன்படி, ரெமோ படத்திலிருந்து சிவகார்த்திகேயன் தனது படத்திற்கு இசையமைப்பாள அனிருத்தை இசையமைக்க ஒப்பந்தம் செய்வாராம்.

அதுபோல், நெல்சன் இயக்கிய டாக்டர் மற்றும் சிபி சக்கரவர்த்தியின் ‘டான்’ திரைப்படம் என தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அறிமுக இயக்குனருக்கு இசையமைத்துள்ளார் அனிருத். ஆனால், சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்களேன்  – அடுத்தடுத்த பெரிய படங்கள்.. ஒரே மாசத்தில் 80 கோடி சம்பளம்.! மச்சக்கார மக்கள் செல்வன்.!

 

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வின்.

மேலும், அவர் இயக்கிய ‘மண்டேலா’ படத்தின் இசையமைப்பாளர் பரத் சங்கரை இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல், சிவகார்த்திகேயனின் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இன்னும் இவரது அடுத்த படமான கமல் தயாரிக்கும் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.