More
Categories: Cinema News latest news

கொளுந்துவிட்டு எரியும் த்ரிஷா பிரச்சினை.. விஜயோட டேக்டிக்ஸ்தான் அந்த புகைப்படம்! அப்போ உண்மையா?

Vijay Trisha: சமீப காலமாக விஜய் திரிஷா பற்றிய சர்ச்சை தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விஜய் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாளை கடந்த 22ஆம் தேதி கொண்டாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இதில் த்ரிஷா வித்தியாசமாக ஒரு லிஃப்ட்டில் விஜயும் திரிஷாவும் இருக்கும் மாதிரியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார். ஏற்கனவே விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே ஏதோ சம்திங் சம்திங் இருப்பதாக சமூக வலைதளங்களின் செய்திகள் வெளியாகிக் கொண்டு வந்தனர் .இதற்கிடையில் இந்த ஒரு புகைப்படம் மீண்டும் அந்த சர்ச்சையை பெரிதாக்கி இருக்கிறது .

இதையும் படிங்க: வாங்கிய அட்வான்ஸை விட்டெறிந்த ஸ்ரீகாந்த்! மணிரத்னம் சொன்ன ஒரு வார்த்தை.. இன்று வரை தொடரும் மோதல்

இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும்போது பல தகவல்களை பகிர்ந்து இருந்தார் .இதோ அவர் கூறியது. விஜய் அரசியலுக்கு வரும் நேரத்தில் இந்த மாதிரி காதல் சர்ச்சைகள் வருவது உள்நோக்கத்தில் ஏதாவது நடக்கிறதா என நிருபர் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த வலைப்பேச்சு அந்தணன்  ‘உள்நோக்கத்தில் வெளியிலிருந்து யாரும் செய்யவில்லை. உள்நோக்கத்தில் உள்ளே இருக்கும் ஆட்கள் தான் இப்படி செய்கிறார்கள்’ எனக் கூறினார்.

மேலும் உள்நோக்கம்  என்றால் விஜய்க்கு தெரியாமல் திரிஷா அந்த புகைப்படத்தை வெளியிட போவதில்லை. இந்த போட்டோ எடுத்திருப்பது ஒன்னு விஜய் மொபைலில் இருக்க வேண்டும் அல்லது திரிஷா மொபைலில் இருக்க வேண்டும். இவர்கள் இருவரின் போனில் இருக்கும் புகைப்படம் வெளியாட்களுக்கு சென்று இருக்கிறது என்றால் அது யார் அனுப்பி இருப்பார்கள்?

ஒன்று விஜய் அனுப்பி இருக்க வேண்டும் அல்லது திரிஷா அனுப்பி இருக்க வேண்டும். ஆக இவர்கள் இருவரின் சம்மதம் இல்லாமல் இந்த புகைப்படம் வெளியே சென்று இருக்க முடியாது .அப்போ யாரோ ஒருவர் இது வேண்டும் என நினைத்து வெளியிடுகிறார்கள். அதை இன்னொருத்தரால் தடுக்க முடியவில்லை அல்லது இன்னொருத்தர் ஓகே வந்தது நல்லது தான் என நினைக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆபாசமாக ஓடிவந்த நயன்தாரா!.. ஆடிப்போன இயக்குனர்!.. சூர்யா படத்தில் நடந்தது கூத்து!..

இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தான் நடந்திருக்க முடியும். அப்போ இதில் சதி  இருப்பதாக நாம் எப்படி நினைக்க முடியும் என கூறினார். அதுமட்டுமல்லாமல் யாரோ எடுத்து யாரோ வெளியிடுவது என்பது வேறு. ஆனால் இந்த புகைப்படத்தை பொருத்தவரைக்கும் அவர்களே எடுத்து அவர்களே சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர் என்றால் மக்களுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என நினைக்கிறார்கள்.

திடீரென ஒரு விஷயத்தை மக்களுக்கு சொல்லும் போது அவர்களின் ரியாக்ஷன் வேறு மாதிரியாக இருக்கும். அதனால் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக புகைப்படங்களை பகிர்ந்து அவர்கள் சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வருகிறார்கள் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். அதனால் இந்த விவகாரம் இப்போதைக்கு சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறது. நாளைக்கு இது எந்த அளவு மாறப்போகிறது என சொல்ல முடியாது.

இதையும் படிங்க: இத்தனை கெட்டப்பில் டெஸ்ட் ஷூட் நடந்ததா? ‘இந்தியன்’ தாத்தாவையும் மிஞ்சிய கெட்டப்கள்.. இதோ பாருங்க

இன்னொரு பக்கம் விஜய் அரசியலில் ஒரு  மாபெரும் சக்தியாக மாறும் போது இவரை விரட்டுவதற்கு எதிர்கட்சிகள் த்ரிஷா பிரச்சினையை கொண்டு வரலாம். அதனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் ஒரு ஆழமான  நட்பே இருக்கிறது என்பதை முன் கூட்டியே மக்களுக்கு தெளிவு படுத்த விஜயும் த்ரிஷாவும் செய்யும் டேக்டிக்ஸாகவும் இது இருக்கலாம் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts