Connect with us

Cinema News

மகாராஜாவை மிஸ் பண்ணது இதனால்தான்.. ஒருவழியா விஷயத்தினை சொல்லிட்டாரு ஷாந்தனு..

Shanthanu: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான முக்கிய இடம் பிடித்தது மகாராஜா. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு முன்னர் ஷாந்தனு நடிக்க இருந்தாராம். ஆனால் ஏன் அது நடக்கவில்லை என்ற முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா. நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட இப்படம் இந்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்த் பேர சொல்லி ஏமாற்றிய ராவுத்தர்!.. ரஜினி படத்தை மிஸ் பண்ண இயக்குனர்!…

விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. அதை தொடர்ந்து படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் தமிழ் ரசிகர்களை விட எல்லா மொழி ரசிகர்களுக்கும் படம் சூப்பர்டூப்பர் ஹிட் கொடுத்தது.

ஆனால் இப்படத்தை முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இல்லை. நித்திலன் முதல் படம் குரங்கு பொம்மை என்பதுதான் பலருக்கு தெரியும். ஆனால் அவர் முதலில் மகாராஜா திரைப்படத்தை தான் படமாக வேண்டும் என பல நடிகர்களிடம் கதை சொல்லி இருக்கிறார். ஷாந்தனு இப்படத்தில் நடிக்க அதீத ஆர்வம் காட்டியிருக்கிறார்.

Maharaja

இது குறித்து நித்திலன் கூறும்போது ஷாந்தனு என்னை பல தயாரிப்பாளர்களிடம் அழைத்து சென்றார் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் மகாராஜா முதலில் நடக்கவில்லை. அதிலிருந்து ஒரு கருவை எடுத்துதான் குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கி முடித்தேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சாந்தனு அதை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:  இதுதான் ஹிஸ்ட்ரி! தொடர்ந்து சாதனை படைத்து வரும் மகாராஜா.. என்ன மேட்டர் தெரியுமா?

நான் இந்த படத்தில் நடிக்க தயாராக தான் இருந்தேன். ஆனால் தயாரிப்பாளர்கள் தான் இந்த படத்தை ஓகே செய்வது தயக்கம் காட்டினர். ஆனால் இன்று கதை தான் ராஜா என்பதை நித்திலன் நிரூபித்து விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

google news
Continue Reading

More in Cinema News

To Top