More
Categories: Cinema News latest news

ஷங்கர் கூட முதல் மருமகனுக்காக ஆதரவாக பேசினாரா? ஆனால் மகள் செய்த துணிச்சலான சம்பவம்!…

Shankar: இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு மூன்றே வருடத்தில் இரண்டாவது நிச்சயத்தார்த்தம் நடந்தது. பலருக்கு அதிர்ச்சியான நிலையில் அதுகுறித்து மேலும் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கர். அவரின் படங்களில் எல்லாம் சமூகம் சார்ந்த கருத்துக்களே அதிகம் இருக்கும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என புகழ் பெற்றவர். எந்திரன், 2.ஓ என அவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ரகமாக அமைந்தது.

இதையும் படிங்க: நான்தான் அதுல பெஸ்ட்டுன்னு நினைச்சேன்!. ஆனா விஜயகாந்த் அசத்திட்டாரு!.. ராதா என்ன சொல்றார் பாருங்க!…

இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அதிதி எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு கோலிவுட்டில் விருமன், மாவீரன் படங்களில் நடித்திருக்கிறார். முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா காலத்தில் கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் திருமணம் நடந்தது.

பெரிய வீட்டு திருமணம் என்பதால் கோலாகலமாகவே நடந்தது. ஆனால் ரோகித் மற்றும் அவர் அப்பா மீது 16 வயது இளம் வீராங்கனை பாலியல் சீண்டல் நடக்கிறதாம். ஆனால் இதை வெளியில் கசிய விடக்கூடாது என்ற தொணியில் அந்த பெண்ணுக்கு மகளிர் கிரிக்கெட் டீமில் இடம் வாங்கி தருவதாக  ஆசை காட்டுகின்றனர். 

இருந்தும் அந்த பெண் குழந்தைகள், பெண்கள் நல சங்கத்தில் புகார் ஒன்றை கொடுக்கிறார்கள். அதனால் ரோகித் அவர் அப்பாவுடன் போக்சோ சட்டத்தில் கைதாகிறார். அதன் வீரியம் புரிந்தும் மகளுக்காக மருமகனை காப்பாற்ற போராடி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் ஐஸ்வர்யா ஷங்கர் இப்படிப்பட்ட ஒருவருடன் நான் வாழவே மாட்டேன் எனக் கூறி ஆறே மாதத்தில் பிரிந்துவிட்டாராம்.

இதையும் படிங்க: ரஜினியை பதறவிட்ட கேப்டன் விஜயகாந்த்!.. பாத்ததும் பயந்துட்டாரு!.. நடிகர் சொன்ன தகவல்…

அதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் முறையாக விவகாரத்து பெற்றனர். இதனை தொடர்ந்தே தன்னுடைய டீமில் இருந்த தருண் கார்த்திகேயனுக்கு தன்னுடைய பெண்ணை முறையாக திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருக்கிறாராம். அதற்கான நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்தது. தருண் கார்த்திகேயன் பெரிய குடும்பத்தினை சேர்ந்தவர் இல்லை என்றாலும் குணத்தில் ரொம்பவே நல்ல மகனாக இருப்பார் என்றே அவரை தன் மகளுக்கு ஷங்கர் தேர்ந்தெடுத்தாராம்.

Published by
Akhilan

Recent Posts