15 நிமிஷத்துல விஜயகாந்திகிட்ட இருந்து போன் வந்தது!.. ஜெயபிரகாஷ் சொன்ன சம்பவம்!..

 
15 நிமிஷத்துல விஜயகாந்திகிட்ட இருந்து போன் வந்தது!.. ஜெயபிரகாஷ் சொன்ன சம்பவம்!..

நடிகர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணத்தை உடைத்தவர் விஜயகாந்த்.. எந்த ஈகோவும் இல்லாமல் பந்தா காட்டாமல், செயற்கையாக நடந்து கொள்ளாமல் மிகவும் இயல்பாக, நல்லவராக நடந்து கொண்டவர்தான் விஜயகாந்த்.

பெரிய நடிகராக இருந்தும் அவரிடம் தலைக்கணம் இல்லை.. எல்லாவகையிலும் மற்றவர்களுக்கு உதவியவர். அவர் முன் யாரேனும் கஷ்டப்பட்டால் உடனே தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.. பலருக்கும் உணவளித்தார்.. பல புதிய இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் உருவாக்கினார்.. இதனால்தான் திரை உலகத்திற்கு அவரை பிடித்தது..

அதனால்தான் விஜயகாந்தை பற்றி தவறாக திரை உலகில் யாருமே பேச மாட்டார்கள்.. திரையுலகில் விஜயகாந்தை மோசமாக விமர்சித்து பேசிய ஒரே ஆள் வடிவேலு மட்டும்தான்.. அது கூட அவரின் தனிப்பட்ட கோபம்தான்.. அவருக்கும் விஜயகாந்தை பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில்தான், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜெயபிரகாஷ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்..

15 நிமிஷத்துல விஜயகாந்திகிட்ட இருந்து போன் வந்தது!.. ஜெயபிரகாஷ் சொன்ன சம்பவம்!..

விஜயகாந்த் சார் அரசியல்ல 25 சீட் ஜெயிச்சி பரபரப்பா இருந்த டைம்.. நான் அவரை நேர்ல பாக்கணும்னு ஆசைப்பட்டு அவரோட மேனேஜர்கிட்ட சாரை பாக்கணும்னு அப்பாயின்மென்ட் வாங்கி கொடுங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.. அரசியலில் ஜெயிச்ச பரபரப்பு.. எப்படியும் ஒரு வாரம் இல்லை 10 நாட்கள் கழிச்சு கூப்பிடுவாருன்னு நெனச்சேன்..

ஆனா அடுத்த 15 நிமிஷத்துல சார் உங்களை வர சொன்னாருன்னு அவர் ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சி.. அவ்ளோ கூட்டத்துல என்னை ஆபிஸ்குள்ள கூட்டிட்டு போய் என்ன சார்.. என்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுட்டு.. இது நம்ம ஆபீஸ்.. நீங்க எப்போ வேணா வரலாம்னு சொன்னார்.. உண்மையா சொல்றேன்.. அவரோட இடத்துல வேற யாரு இருந்தாலும் இதெல்லாம் நடக்காது’ என்று கூறியிருக்கிறார்..

From Around the web