எம்.ஜி.ஆர் எனக்கு விட்ட சாபம் அது!.. சிவக்குமார் ஓப்பனா சொல்லிட்டாரே!…

 
எம்.ஜி.ஆர் எனக்கு விட்ட சாபம் அது!.. சிவக்குமார் ஓப்பனா சொல்லிட்டாரே!…

80களில் முக்கிய நடிகராக இருந்தவர் சிவக்குமார். அதற்கு முன்பு 60,70களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்களில் இவர் நடித்திருக்கிறார். சினிமா துறையில் இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத விரல் விட்டு எண்ணக் கூடிய நடிகர்களில் சிவக்குமாரும் ஒருவர். அதோடு தேக ஆரோக்கியத்திலும், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். யோகாவை தொடர்ந்து செய்து வருபவ்வர். கடந்த பல வருடங்களாகவே ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இளைஞர்களுக்கான அறிகுறிகளை தொடர்ந்து சொல்லி வருகிறார்..

கதாநாயகனாக நடித்து வந்த சிவக்குமார் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். ஒரு கட்டத்தில் நடிப்பது போதும் என்று நிறுத்திவிட்டார். சிவக்குமார் செயலும், பேச்சும் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும். சமீபத்தில் கூட சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு ‘எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுபான கடைகளை மூட வேண்டும்.. குடிமக்களை குடிகார மக்களாக அரசு மாற்றியிருக்கிறது’ என பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்..

இந்நிலையில், பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114வது பிறந்தநாள் விழாவில் பேசிய சிவகுமார் ‘என்னுடைய நூறாவது படத்தில் சாகும் வரை இளமையாக இருப்பான் சிவக்குமார்’ என்று எம்ஜிஆர் சாபம் விட்டு சென்றார்.. எம்ஜிஆர் சொன்னது போலவே இப்போதும் நான் இளமையாக இருக்கிறேன். எனக்கு 85 வயதாகிறது.. ஆனால் என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது’ என்று சிவக்குமார் பேசியிருக்கிறார்.

From Around the web