ரோஜா கூட்டம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? : சசி சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் சசியும் ஒருவர். முதல் படமான ரோஜா கூட்டம் படத்தில் தொடங்கி, பூ, பிச்சைக்கரன், டிஷ்யூம், சொல்லாமலே
 
director sasi

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் சசியும் ஒருவர். முதல் படமான ரோஜா கூட்டம் படத்தில் தொடங்கி, பூ, பிச்சைக்கரன், டிஷ்யூம், சொல்லாமலே என பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்த நூறுசாமி இந்த மாதம் வெளியாக உள்ளது.

சசியின் முதல் படமான ரோஜா கூட்டம் படத்தினை வானத்தை போல, ரமணா, தசாவதாரம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த அப்போதைய முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. 

prabhu deva

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் சசி கூறியபோது, ரோஜாகூட்டம் படத்தில் முதலில் நான் பிரபுதேவாவைதான் நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். அவரது அப்பா வேடத்தில் பிரகஷ் ராஜை அணுகினேன். ஆனால் அவர் தெலுங்கில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. ஆனால் அவ்ர் இந்த படத்தை புதிய நடிகர்களை வைத்து எடுங்கள் என்று கூறினார். இதையடுத்தே ஸ்ரீகாந்த் இப்படத்தில் நடித்தார் என்று சசி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

From Around the web