இன்றைய திரைப்பட இசை எப்படி இருக்கு? பொறுக்க முடியாமல் இளையராஜா சொன்ன பதில்!
1976ம் ஆண்டு தான் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமானார். அவர் அறிமுகமான அந்த தினத்தில் இருந்து இன்று வரை தமிழக ரசிகர்கள் கொண்டாடுகிறவராக இருக்கிறார். அவர் சமீப காலத்து இசையைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
என்னுடைய கவலைகள் எல்லாம் சப்தங்கள் மீதுதான். நேற்று ஒரு படத்துக்காக பின்னணி இசை அமைத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு ஒலி எழுந்தது. 10, 15 வினாடிகள் தான் கேட்டிருப்பேன். எனக்கு தலைசுற்றல் வந்து நான் தடுமாறிப் போனேன். பக்கத்துல இருந்த உதவியாளரைப் பார்த்தார். இந்த சவுண்ட் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது சார் என்றார் அவர். சிந்தித்துப் பார்த்தால் அதே மாதிரியான சப்தங்களைத்தான் இன்றைய இளைஞர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த ஒலிகள் அவர்களுக்குள்ளே என்ன மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கும் என்று நினைத்தால் மனதிலே கவலை வருகிறது. நமது மண்ணின் இசை எல்லாமே இயற்கை வாத்தியங்கள் தந்தவை. அதை இப்போது உள்ளவர்க்ள ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க அப்படின்னு தெரியலன்னு அந்த பத்திரிகை நிருபருக்கு பதில் சொல்லி இருக்கிறார் இளையராஜா.