இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் செட்டாகாத பாடல்… பிரபலம் தந்த சுவாரசிய தகவல்
பண்டை தமிழர் வாழ்வில் இருந்த மெல்ல மறைந்து போன கொலைச்சிந்து வடிவத்தை மீட்டெடுத்த பெருமை இசைஞானி இளையராஜாவையேச் சேரும். ஏற்கனவே இளையராஜாவினன் இசையில் மலையூர் மம்பட்டியான் படத்தில் வரும் காட்டுவழி போற பொண்ணே பாடல் இந்த வடிவத்தில் இருந்தது. இன்னொரு பாடல் உண்டு. இளையராஜாவைத் தவிர வேறு யாரும் இந்தப் பாட்டைப் பாடி இருந்தாலும் அந்தளவுக்கு யதார்த்தமான கிராமத்து நடை, ஒரு வெள்ளந்தியான மனிதனின் நிலை கிடைத்திடுமா என்பது சந்தேகம்.
அப்படி ஒரு பாடல் தான் வைரமுத்து எழுதியது. கரிமேடு கருவாயன் படம் 1986ல் விஜயகாந்த், நளினி நடிப்பில் வெளியானது. இளையராஜா இசை அமைத்துள்ளார். மதுரை அருகில் உள்ள கருவாயன் என்ற வீரமனிதனின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டது. 2வகையான கதையைச் சொல்றாங்க. ஒண்ணு அவர் சோழவந்தானில் வாழ்ந்தவர் என்பது. இன்னொன்னு பரவை முனியம்மாவின் கொலைச்சிந்து வடிவத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர் என்ற கதை. இன்னொன்றும் சொல்றாங்க.
ஒரு கதை சுவாரசியமாக வர கொஞ்சம் கொஞ்சமாக இட்டுக்கட்டி பாடும்போது வரலாற்றில் சுவாரசியமான விஷயங்கள் சேர்க்கக் கொஞ்சம் மாற்றுவாங்க. ஆனால் கரிமேடு கருவாயன் வாழ்ந்தது உண்மை. அவர் தங்கச்சிக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ரொம்ப எளிமையான மனிதர். தங்கை வேலை பார்த்த இடத்தில் பண்ணையார் கற்பழிக்கிறார்.
அவரைக் கொல்றாரு கருவாயன். போலீஸ் அவரைத் தேடி சுட்டுக் கொல்றாங்க. கருவாயன் கையில் அரிவாள், துப்பாக்கி கிடையாது. கவன் வில் தான் உண்டு. இவருக்கு தென்னை மரம் ஏறும் வழக்கம் உண்டு. அங்கு போய் ஒளிந்து கொள்வார். போலீஸே பிடிக்க முடியாது. இந்தப் படத்தில் வரும் கொலைச்சிந்து வடிவ பாடல் இதுதான். அப்படி இட்டுக்கட்டி பாடிய இளையராஜா பாடல்தான் இது. கதை கேளு கதை கேளு கரிமேடு கருவாயன் கதை கேளுன்னு பாடுறாரு.
இந்தப் பாடலில் கட்டுக்கதை அல்ல. ஒட்டுக்கதை அல்ல. கண்டு கேட்டு வந்தேன் ஒருவாரு. வைகை நதிக்கரை ஓரத்துல அங்கு வாழ்ந்து ஜெயித்தவன் வரலாறுன்னு வரிகள் வருகிறது. அவனைப் போலீஸ் சுட்டுக் கொல்லுது. தங்கச்சியைப் போலீஸ் கற்பழிக்கிறான். அதென்ன வாழ்ந்த ஜெயித்தவன் வரலாறுன்னு கேட்கலாம். வாழ்ந்து தன் குடும்பத்தை அழிச்சவனை ஜெயிச்சவன் வரலாறுன்னு கவிஞர் அழகா சொல்லிருக்காரு. உண்மையிலே அவன் கள்ளன் இல்ல. மதுரை ஜில்லாவுக்கே அவன் செல்லப்பிள்ளை என்ற இடத்தில் யா யா யான்னு இளையராஜா ராகம் போட்டு இழுத்துப் பாடுவார்.
அது அவ்ளோ ரசனையாக இருக்கும். அதே போல அடுத்த வரிகளில் போலீஸ்காரனால எல்லாம் கருவாயனைப் பிடிக்க முடியாது. அவன் சாதாரண மனுஷன் இல்லேன்னு எள்ளி நகையாடுவது போல இருக்கும். பாடலில் கருவாயனின் தனித்திறமை, காதல் எல்லாவற்றையும் நயம்பட பாடியிருப்பார் இளையராஜா. பாடல் முழுக்க கொலைச்சிந்து வடிவில் அவ்வளவு அழகியலும், யதார்த்தமும் கலந்து இளையராஜாவும், வைரமுத்துவும் தந்து இருப்பார்கள். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
