இளையராஜா போட்ட தாலாட்டு குத்து பாட்டா மாறிடுச்சி!.. நாயகனில் நடந்த சம்பவம்!...

 
ilayaraja
நிலா அது வானத்து மேலே


ஒரு இசையமைப்பாளர் ஒரு திரைப்படத்தில் ஒரு சூழ்நிலைக்காக ஒரு பாடலை உருவாக்குவார். ஆனால் அது நன்றாக இருந்தும் கூட அந்த டியூன் நிராகரிக்கப்படலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அப்படி நிராகரிக்கப்பட்ட அந்த டியூனை அதே இசையமைப்பாளர் வேறு படத்திற்கு பயன்படுத்துவார் அல்லது அந்த டியூனை மாற்றி அதே படத்தில் கூட அவர் பயன்படுத்துவார்.

இப்படி பல சம்பவங்கள் இளையராஜாவின் இசை வாழ்வில் நடந்திருக்கிறது. அப்படி ஒன்றுதான் ‘நிலா அது வானத்து மேலே’ பாடல். 1987ம் வருட வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கு ஜனகராஜும், குயிலும் இணைந்து நடனமாடியிருந்தனர்.

போதைப்பொருட்களை கமல்ஹாசன் ஒரு படகில் கடத்துவார். போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிந்து அங்கு வருவார்கள்.. போதை பொருளை ஒரு மூட்டையில் வைத்து அதில் உப்பு வைத்து கட்டி கடலுக்கு அடியில் போட்டு விடுவார். அந்த சூழ்நிலையில்தான் அந்த  ‘நிலா அது வானத்து மேலே’ பாடல் வரும். மிகவும் ஜாலியான ஒரு குத்துப் பாடல் அது.

song

ஆனால் இந்த பாடல் முதலில் குத்து பாடலாக உருவாக்கப்படவில்லை என இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர் நாயகன் படத்தில் இடம்பெற்ற ‘நாயகன் படத்தில் வரும் ‘தென்பாண்டி சீமையிலே’ பாட்டுக்கு மாறுதலாக நான் போட்ட தாலாட்டு பாடல்தான் அந்த டியூன்.. ஆனால் அந்த சூழலுக்கு அந்த டியூன் பயன்படுத்த முடியாமல் போனதால் அதே பாடலை குத்துப்பாட்டாக மாற்றி ‘நிலா அது வானத்து மேலே’ பாடலாக மாற்றினோம்’ என தெரிவித்திருக்கிறார்.

இந்த பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாயகன் திரைப்படம் மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் இருவருக்கும் முக்கிய படமாக அமைந்தது.

Tags

From Around the web