MGR: எம்.ஜி.ஆர் படத்துக்கு பாட்டெழுதிய கே.பாக்யராஜ்!.. அந்த படத்துக்கா?..

 
mgr bhagyaraj


80களில் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என கலக்கியவர் கே.பாக்யராஜ். குறிப்பாக கே.பாக்யராஜின் படங்களுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போதெல்லாம் மேட்டனி ஷோ என சொல்லப்படும் மதிய காட்சிக்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக் சென்று தியேட்டரில் பாக்யராஜ் படங்களைத்தான் பார்ப்பார்கள்.

அந்த அளவுக்கு அதிக ரசிகைகளை பாக்யராஜ் பெற்றிருந்தார். ஒருபக்கம் மறைந்த நடிகர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக பாக்கியராஜ் இருந்தார். அவர் சென்னை வந்த போது எம்ஜிஆரை சந்திக்க முயன்று அது நடக்கவில்லை. ஆனால் அதே பாக்யராஜ் திரைப்படங்களை இயக்க துவங்கியதும் அவரின் படங்களை பார்த்து எம்.ஜி.ஆர் பாராட்டினார்.

அதோடு ஒரு கட்டத்தில் பாக்யராஜை தனது கலை வாரிசு எனவும் எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்படிப்பட்ட கே. பாக்யராஜ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகிற்கே பேரிழப்பாக அமைந்தது. இந்நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய கே.பாக்யராஜ் சினிமாவில் நுழைவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் படத்திற்கு பாடல் எழுதிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

நான் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது கவிஞர் புலமைப்பித்தன் என்னிடம் ‘தம்பி உன்னுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது.. நான் எழுதவுள்ள பாடல் ஒன்றை நீ காப்பி பண்ணு’ என்று கூப்பிட்டார். நானும் சென்றேன். அப்படி நான் போய் பார்த்தால் அது தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படம்.

அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ பாடலை புலமைப்பித்தன் சொல்ல நான் எழுதினேன்.. தலைவரைத்தான் சந்திக்க முடியவில்லை.. தலைவரின் படத்திற்கு பாடல்களை காப்பி பண்ணும் வாய்ப்பாவது நமக்கு கிடைத்ததே’ என்று நான் மிகவும் சந்தோஷப்பட்ட தருணம் அது’ என மிகவும் நெகிழ்ச்சியுடன் பாக்கியராஜ் பேசியிருந்தார்.

Tags

From Around the web