Kamal: இனிமே உன்ன வச்சி படமெடுக்க மாட்டேன்!. பாலச்சந்தரை டென்ஷன் ஆக்கிய கமல்..
களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்த கமலுக்கு வாலிப வயதை எட்டியதும் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் வந்தது.. சினிமாத்துறையில் நடன இயக்குனர் ஆவதா? நடிகனாவதா? அல்லது வேறு ஏதாவது செய்யலாமா? என்ற குழப்பத்தில் அவர் இருந்தர்.
அதன்பின், தங்கப்பன் என்கிர நடன இயக்குனரிடம் கமல் உதவியாளராக சேர்ந்தார். ஆனால் அவரை அங்கே பார்த்த நடிகர் ஜெமினி கணேசன் ‘நீ எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். என்னுடன் வா’ என கமலை அங்கிருந்து கூட்டி சென்ற இடம் இயக்குனர் கே.பாலச்சந்தரின் அலுவலகம்.
‘இவனை நீ நடிகனாக்க வேண்டும்’ என ஜெமினி கணேசன் சொல்ல அதற்குக் சம்மதித்த பாலச்சந்தர் தான் இயக்கும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கமலை நடிக்க வைத்தார். இதன் காரணமாகவே கமல் நட்சத்திரமாக மாறினார். பாலச்சந்தரின் பல படங்களிலும் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் தொடர்ந்து பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் கமல்ஹாசன்..

பாலச்சந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் கடைசியாக நடித்த திரைப்படம் உன்னால் முடியும் தம்பி. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு கமல் தாமதமாக வர உதவி இயக்குனர் ஒருவர் ‘ஏன் சார் இவ்வளவு லேட்டா வறீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.
அப்போது கமல் ‘நான் என்ன மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்க சீரியல் போல ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என சொல்லிவிட்டாராம். இதை அந்த உதவி இயக்குனர் பாலசந்தரிடம் சொல்ல கோபமடைந்த பாலச்சந்தர் ஒரு மாலையை கமலின் கழுத்தில் போட்டு ‘இதுதான் நான் உன்னை வைத்து இயக்கம் கடைசி திரைப்படம்’ என சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே அந்த படத்திற்கு பின் கமலை வைத்து பாலச்சந்தர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
