மருந்துல தேன் தடவி கொடுத்த மணிரத்னம்... ரோஜா உருவானது இப்படிதானா?

 
roja, manirathnam

ஒரு திரைப்படத்தின் கதையை எழுதும்போது எதை எதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நான் எழுதுவேன்னு மணிரத்னம் பத்திரிகை ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி என்னதான் சொல்றாருன்னு பாருங்க.

படமாக்குவதற்கு ஏதாவது வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்தா இது மாதிரி கதை எல்லாம் ஜனங்க பார்க்கவே மாட்டாங்க. இந்த கதைக்கு எல்லாம் தியேட்டர்ல கூட்டமே வராது. வசூலே ஆகாதுன்னு இந்த துறையிலே 34 வருடம் ஊறி கொட்டை போட்ட பலர் சொல்வாங்க. அப்படி அவங்க சொல்றதைக் கேட்கும்போது எல்லாம் ஜனங்களுடைய டேஸ்ட்டை நிர்ணயம் பண்றதுக்கு இவங்க யாருன்னு எனக்குள்ள அப்படி ஒரு கோபம் வரும். இந்த விஷயத்துக்காக ஒரு படம் ஓடும்.

இந்த விஷயத்துக்காக படம் ஓடாது. அப்படின்னு எல்லாம் கண்ணை சுருக்கி பார்க்கறது எல்லாம் பழைய பார்முலா. உதாரணத்துக்கு என்னுடைய இயக்கத்தில உருவான ரோஜாவை எடுத்துக்கங்க. அது கொஞ்சம் வித்தியாசமான கதை தான். காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றி அந்தப் படத்தினுடைய பிற்பகுதியில் தான் நான் அதிகமா சொல்லி இருப்பேன். அந்த தீவிரவாதிகளைப் பற்றி அந்த காலகட்டத்துல அவ்வளவாக தமிழ்நாட்டுல இருந்தவங்களுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை.

அப்படிப்பட்ட ஆடியன்ஸ்கிட்ட இந்தக் கதை போய் சேரணும். அதனாலதான் அந்த தீவிரவதிகளை கதையைச் சுற்றி ஒரு அழகான ஒரு திரைக்கதையை அமைத்தேன். அந்தப் படத்தினுடைய ஆரம்பத்துல இரண்டு கதாபாத்திரங்களுக்கு மத்தியில காதல் பெருக்கெடுத்து ஓடும்.

அப்படிப்பட்ட காதலர்கள் படத்தின் பிற்பகுதியில் எப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைத்தான் சாதாரணமாக சொல்வார்கள். மருந்துல தேன் தடவிக் கொடுக்கணும்னு. அப்படி அந்தப் படத்திலே கொடுத்திருந்தேன் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 

Tags

From Around the web