எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அப்படி இருந்த அவரிடமே கதாநாயகியான ஒருவர் நேருக்கு நேராக மோதியுள்ளார். யார் என்ன சம்பவம்னு பார்க்கலாமா…
நாடோடி மன்னன் படத்தில் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் பிரச்சனையா? அப்புறம் ஏன் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
நாடோடி மன்னன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியபோதே அந்தப் படத்தின் கதாநாயகியான பானுமதிக்கும், அந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்து இயக்கிய எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டன.
ஒரு நாள் ஒரு காட்சியைத் திரும்ப திரும்ப படமாக்கியபோது இதுக்குத் தான் ஒரு நல்ல டைரக்டரைப் போட்டுப் படம் எடுத்துருக்கணும். கே.சுப்பிரமணியத்தைப் போட்டுப் படமாக்கி இருந்தா இது மாதிரி பிரச்சனை எல்லாம் வந்துருக்காது என எம்ஜிஆர் முகத்துக்கு நேராகவே கூறினார். அது மட்டும் இல்லாம அந்தப் படத்தின் பாடல்களின் போது, பாடல்களின் கம்போசிங்கின் போது எல்லாம் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் இடையே உரசல்கள் இருந்துக்கிட்டே தான் இருந்தது.
அதன் காரணமாகத் தான் இனியும் அவரோட ஃபோர்ஷனைத் தொடர முடியாதுங்கறதால அதை அப்படியே கட் பண்ணிட்டு இன்னொரு கதாநாயகியை அறிமுகப்படுத்துவது என முடிவெடுத்தார் எம்ஜிஆர். அப்படி அந்தப் படத்துக்குள்ளே வந்தவர் தான் சரோஜாதேவி என்றார் எம்ஜிஆர்.
