என்னது எம்ஆர்.ராதா கிருஷ்ணர் வேஷத்துல நடிச்சாரா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
நடிகவேள் எம்ஆர்.ராதா எப்படிப்பட்ட ஆற்றல் மிக்க நடிகர் என்பது நமக்குத் தெரியும். அதே நேரத்தில் அவர் எப்படிப்பட்ட கொள்கைகளுக்குச் சொந்தக்காரர் என்பதும் நாம் அறிந்ததே. அதுல முக்கியமாக இருந்தது கடவுள் மறுப்புக் கொள்கை. திராவிட கழகத்தின் மீது தீவிர பற்றாளராக இருந்தார். அதனால் கடவுள் மறுப்பு கொள்கைiயிலும் தீவிரமாக இருந்தார். அப்படி இருந்தவருக்கு நாடகத்துல முதன் முதலாகக் கிடைத்தது கிருஷ்ணர் வேடம்.
இதுபற்றி அவரது மனைவி தனலெட்சுமி ஒரு பேட்டியில் அழகாக விவரித்துள்ளார். என் கணவருடைய குடும்பத்தினருக்கு பூர்வீகம் ஆந்திராவில் உள்ள சித்தூர். அவரது அப்பா ராணுவத்தில் இருந்தார். என் கணவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை. வேதகிரி மேஸ்திரி தெருவில்தான் அவருடைய வீடு இருந்தது. 8 வயசுல வீட்டை விட்டுக் கோபித்துக் கொண்டு போனவர் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டார். அங்கே போனதும் அவருக்குக் கிடைத்தது கிருஷ்ணர் வேஷம்.
அதை ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. கையில் காப்பு, மோதிரம் எல்லாம் போட்டு அவரை மிகச்சிறப்பாகக் கவனித்திருக்கிறார்கள். 2 வருஷம் அந்த நாடகக்கம்பெனியில இருந்தவருக்கு அவரது அம்மா நினைவு வந்தது. அதனால் தான் சென்னைக்கு அவர் மீண்டும் திரும்பி வந்தார். நாடகக்கலைஞரான அவருக்குப் பின்னாளில் திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன என்றாலும் அவரைப் பொருத்தவரைக்கும் நாடகக்கலையைத் தான் அவர் உயிராக மதித்தார்.
எண்ணற்ற நாடகங்களில் நடித்த அவரைத் தேடி பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. திரைப்படங்களில் எப்படிப்பட்ட திறமையாளராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பல வெற்றிப்படங்களில் நடித்து இருந்தபோதும் அவர் உயிருக்கு உயிராக மதித்ததுன்னா நாடகக்கலையைத் தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் அவரது மனைவி தனலெட்சுமி.
