வலியில் துடித்த விஜயகாந்த்!.. டேய் மனுஷனாடா நீ!.. கோபத்தில் கத்திய இப்ராஹிம் ராவுத்தர்!…
வசதியான குடும்பத்தில் இருந்து வந்தாலும் வசதியான வாழ்க்கையை வாழாதவர் விஜயகாந்த். சினிமா ஆசையில் சென்னை வந்து சென்னையில் தி.நகரில் ஒரு லாட்ஜில் தங்கி வாய்ப்பு தேடினார்.
நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக சீட்டு விளையாடுவார்.. அதில் ஜெயித்த பணத்தில் சாப்பாடு வாங்கி கொடுப்பார். அதேபோல் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து பெரிய நடிகரானதும் பல புதிய தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் உருவாக்கினார். பலருக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார்..
ஒருபக்கம் விஜயகாந்த் மிகவும் எளிமையானவர்.. மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது.. அதேபோல், ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்ங்கிற்கு வந்துட்டால் பெரிய இயக்குனர், அறிமுக இயக்குனர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்க மாட்டார். இயக்குனர் சொல்வதை செய்வார். அதுதான் விஜயகாந்த். இந்நிலையில்தான் விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிய ஆர்.கே.செல்வமணி ஒரு புதிய தகவலை ஊடகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார்..
கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங் கேரளாவை ஒட்டிய காடுகளில் நடந்தது. அப்போது விஜயகாந்த் காலில் ஒரு ஆணி குத்தி வெளியே வந்துவிட்டது.. வழியில் துடித்துக் கொண்டிருந்தார் ஹாஸ்பிடல் போலாம்னு எல்லாரும் சொன்னாங்க.. ஆனா என்னோட கவலை என்னன்னா மறுபடியும் இப்ராஹிம் ராவுத்தர்கிட்ட 5 ஜெனரேட்டர், ஷூட்டிங் லைட் கேட்டு மறுநாள் அவ்வளவு செலவு பண்ணி என்னால அந்த ஷாட் எடுக்க முடியாது.. அதனால விஜயகாந்த் சார்கிட்ட ‘ ஒரே ஒரு ஷாட் எடுத்துட்டு ஹாஸ்பிடல் போலாம்’னு கேட்டேன்..
பக்கத்துல இருந்த இப்ராஹிம் ராவுத்தர் ‘மனுஷனாட நீ’ என என்னை திட்டினார்.. விஜயகாந்த் சாரை கண்ணிமை மாதிரி அவ்வளவு பாதுகாப்பா பார்த்துப்பார்.. அப்படி ஒரு நட்பு.. ஆனா விஜயகாந்த் சார் ’டேய் இர்ரா’ என சொல்லிட்டு ‘எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று கேட்டார்.. ‘ஒரே ஒரு ஷாட்’ என சொன்னேன்.. அந்த ஷாட்டில் நடிச்சி முடிச்சிட்டுதான் அவர் ஹாஸ்பிடலுக்கு போனாரு’ என சொல்லியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி.
