புலன் விசாரணை படத்தில் நடிக்க தயங்கிய அந்த நடிகர்!.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட்!..
விஜயகாந்தும், அவரின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தோரோடு இணைந்து தயாரித்து நடித்த திரைப்படம்தான் புலன் விசாரணை. அப்போது சென்னை திரைப்பட கல்லூரியில் இயக்கம் பற்றி படித்த சில மாணவர்கள் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார்கள். அப்படி வந்த ஆர்.கே. செல்வமணிதான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
முதலில் ஆர்.கே செல்வமனி மீது விஜயகாந்த்துக்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர். ஒரு கட்டத்தில் பட்ஜெட் அதிகமாகவே ஆர்.கே.செல்வமணியிடம் இப்ராஹிம் ராவுத்தர் கோபப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது..
இந்த படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருந்தார்.. தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ சங்கரின் வாழ்க்கை நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தை ஆர்.கே செல்வமணி இப்படத்தை உருவாக்கியிருந்தார். 199ம் வருடம் வெளியான இந்த படம் ஹாலிவுட் பட ஸ்டைலில் இருந்ததாலும், பக்கா ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது . இந்த படம் ஹிட் என்பதால் விஜயகாந்த்தின் 100வது படத்தை இயக்கும் வாய்க்கும் வாய்ப்பு ஆர்.கே. செல்வமணிக்கு கிடைத்தது. அப்படித்தான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் உருவானது..
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சத்யராஜ் என்பது பலருக்கும் தெரியாது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் ‘மணிவண்னனிடம் ஆர்கே செல்வமணி உதவி இயக்குனராக வேலை செய்தபோதே எனக்கு தெரியும்.. அப்போது புலன் விசாரணை கதையை என்னிடம் கூறினார்.. ஆனால் அவருக்கு அனுபவம் இல்லாததால் இந்த கதையை அவர் சரியாக எடுப்பாரா என்கிற சந்தேகம் எனக்கு இருந்ததால் அப்படத்தில் நடிக்க யோசித்தேன்.. ஆனால் விஜயகாந்துக்கு அது சூப்பர் ஹிட் படமாக அமைந்தது’ என சொல்லியிருக்கிறார்.
