புதுமாப்பிள்ளையானாலும் உட்காரத் தயங்கிய சீர்காழி கோவிந்தரராஜன்... என்ன ஒரு குரு சிஷ்ய உறவு?!
பிரபல புல்லாங்குழல் மேதையான சுவாமிநாத பிள்ளைதான் தெய்வீக இசைக்கலைஞர் என்று போற்றப்படுகின்ற சீர்காழி கோவிந்தரராஜனுடைய குரு. 12ஆண்டுகள் குருகுல வாசம் இருந்து அவரிடம் இசையைக் கற்றுக் கொண்டவர் சீர்காழி கோவிந்தரராஜன். குருமார்கள்ல சுவாமிநாத பிள்ளை கொஞ்சம் வித்தியாசமானவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
தன்னுடைய சிஷ்யர்கள்ல கூட ரொம்ப மரியாதையோடுதான் அவர் எப்போதும் அழைப்பாராம். சீர்காழி கோவிந்தரராஜனை அழைக்கும்போது கூட கோவிந்தரராஜ் ஐயா என்றுதான் அந்தக் காலகட்டத்திலே அவர் அழைத்து இருக்கிறார். தன்னுடைய குருநாதர் மீது அளவுகடந்த மரியாதை வைத்து இருந்தவர் தான் சீர்காழி கோவிந்தரராஜன். அதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம்.
1956ல் சீர்காழி கோவிந்தரராஜூ உடைய திருமணம் நடைபெற்ற போது அந்த திருமண விழாவில் புல்லாங்குழல் கச்சேரியை செய்தவர் அவரது குருநாதரான சுவாமிநாத பிள்ளை. குருநாதர் எதிர்க்க நாற்காலி போட்டு அமர்கின்ற பழக்கம் சீர்காழி கோவிந்தரராஜனுக்கு இல்லை என்பதால் அவர் கச்சேரி செய்யும்போது முழுக்க முழுக்க நின்று கொண்டே இருந்து இருக்கிறார்.
மேடையில் இசைக்கச்சேரி செய்தபடியே இதைப் பார்த்த சுவாமிநாத பிள்ளை, சீர்காழி கோவிந்தராஜன் பக்கம் திரும்பி உட்காரு என்று சொல்லி கையை காட்டி இருக்கிறார். ஆனாலும் சீர்காழி கோவிந்தரராஜன் உட்காரல. உடனே தன்னுடைய பக்கத்தில் இருந்த ஒருவரை அழைத்து முதல்ல அவனை உட்காரச் சொல்லு என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் அந்த குருநாதர்.
அதற்குப் பின்னால தான் சீர்காழி கோவிந்தரராஜன் அந்த மேடையில் உட்கார்ந்தாராம். அந்தக் காலகட்டத்துல குரு சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருந்து இருக்கிறது என்பதற்கு இதை விட என்ன உதாரணம் இருக்கு? மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.