மனைவிக்குக் கட்டளையிட்ட ஏஎம்.ராஜா… ஆனா ஸ்ரீதர்கிட்ட ஒண்ணும் பலிக்கலயே!

 
மனைவிக்குக் கட்டளையிட்ட ஏஎம்.ராஜா… ஆனா ஸ்ரீதர்கிட்ட  ஒண்ணும் பலிக்கலயே!

அந்தக் காலத்தில் தமிழ்த்திரை உலகில் ஏஎம்.ராஜா, ஜிக்கி என்றால் அவ்ளோ மவுசு. அவர்கள் பாடும் பாடல்கள் எல்லாமே அருமையிலும் அருமையாக இருக்கும்.

மயக்கும் மாலை பொழுதே நீ வா வா, வாரோயோ வெண்ணிலாவே, பாட்டு பாட வா, தனிமையிலே இனிமை காண முடியுமா, காயிலே இனிப்பதென்ன, தென்றல் உறங்கிய போதும் ஆகிய பாடல்களை இப்போது கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்ளோ இனிமை, ரசனையுடன் கூடிய இசையில் ஜிக்கி தன் காந்தக்குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு இருப்பார்.

ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும் எப்படி மணவாழ்வில் இணைந்தார்கள்? அதன்பிறகு ஜிக்கியின் வாழ்வில் நடந்த மாற்றம் என்னன்னு பார்க்கலாமா…

தமிழ்சினிமா உலகில் பல வெற்றிப்பாடல்களைப் பாடியவர் ஜிக்கி. இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது. அதனால்தான் அவரது பாடல்களுக்கு ஏராளமான இசை ரசிகர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட பாடல்களைப் பாடிய ஜிக்கியை உருகி உருகி காதலித்தவர் தான் பாடகரும், இசை அமைப்பாளருமான ஏஎம்.ராஜா.

அவருடைய காதலை ஜிக்கியும் ஏற்றுக் கொண்டதால் தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அப்புறம் ஜிக்கி பாடுவதை ஏஎம்.ராஜா விரும்பவில்லை. திருமணத்திற்குப் பிறகு அவர் இசை அமைத்த படம் கல்யாணப்பரிசு. அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்தில் கூட ஜிக்கிக்குப் பாட வாய்ப்பே தரவில்லையாம் ஏஎம்.ராஜா.

அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் வற்புறுத்தியதன் பேரில் தான் துள்ளாத மனமும் துள்ளும் என்ற பாடலை ஜிக்கியைப் பாட விட்டார். திரைப்படங்களிலே பாடக்கூடாது என்று ஜிக்கியின் கணவர் தடைவிதித்ததால் ஜிக்கியின் உடல்நலம் கூட ஒரு காலகட்டத்தில் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் இசை விமர்சகர் வாமனன்.

From Around the web