எனக்கு பாட வாய்ப்பே வராம போனதற்கு அந்த பாட்டுதான் காரணம்!.. புலம்பிய டி.எம்.எஸ்..

Published on: May 24, 2023
tms
---Advertisement---

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ரஜினி வரை திரையுலகில் பல பாடல்களை பாடியவர் டி.எம்.எஸ். பல நடிகர்களுக்கும் இவர் பாடியிருந்தாலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவருக்கும் ஆஸ்தான பாடகராக டி.எம்.எஸ் இருந்தார். அவர்கள் இருவருக்கும் பல காலத்தால் மறக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் ஏற்றதுபோல் குரலை மாற்றி பாடக்கூடியவர் இவர். அவர்கள் இருவர் மட்டுமில்லாமல் நாகேஷ், முத்துராமன், ஜெய் சங்கர் உள்ளிட்ட பலருக்கும் இவர் பாடியுள்ளார். ரஜினிக்கும் சில பாடல்களை பாடியிருக்கிறார். துவக்கத்தில் பக்தி பாடல்களை பாடி அதன்பின் சினிமா பாடல்களை பாட துவங்கினார். 1950ம் வருடம் முதல்1972 வரை பல நூறு பாடல்களை பாடி சாதனை படைத்தார்.

tms
tms

எம்.ஜி.ஆருக்கு இவர் பாடிக்கொண்டிருக்கும்போதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோரை எம்.ஜி.ஆர் தனது படங்களில் பாட வைத்தார். அதன்பின் மெல்ல மெல்ல டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்துபோனது.

இந்நிலையில், ஒருமுறை ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த டி.எம்.எஸ் ‘ஒருதலைக்காதல் படத்தில் பாட வேண்டும் என டி.ராஜேந்தர் என்னை அணுகினர். பாடல் வரிகளை படித்து பார்த்தேன். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என அந்த பாடல் துவங்கியதால் அந்த பாடலை நான் பாடமாட்டேன் என்றேன். அதற்கு அவர் ‘நீங்களா பாடுகிறீர்கள்..படத்தில் அந்த ஹீரோ பாடுகிறார் என ஏதேதோ சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். அந்த பாடலை பாடிமுடித்த பின் அடுத்து ஒரு பாடல் கொடுத்தார். ‘என் கதை முடியும் நேரமிது’ என்கிற அந்த பாடலை பாடினேன். அதோடு சரி எனக்கு பாட வாய்ப்பே வரவில்லை. அந்த பாடல் பாடிய பின் எனக்கு மார்க்கெட்டே போய்விட்டது’ என புலம்பியிருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.