Connect with us
sirgadikka

latest news

முத்துவுக்கு ஆப்படித்த சிட்டி ஆட்கள்… மினிஸ்டரிடம் மாட்டுக்கொள்ள போவது யார்?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பார்வதி முத்துவும், மீனாவும் அன்னியோன்யமா இருக்காங்க. நீ எல்லாரையும் ஒன்னா நடத்துனா? குடும்பம் சந்தோஷமா இருக்கும் என்கிறார். இதனால் கடுப்பாகும் விஜயா, உனக்கு இன்னொரு குல்பி வேண்டும்னா போய் கேளு. அதுங்களுக்கு ஜால்ரா போடாதே என்கிறார்.

இதை தொடர்ந்து, எல்லாரும் அசதியில் தூங்கிவிட மீனா தொடர்ந்து மாலை கட்டிக்கொண்டு இருக்கிறார். எழுந்திருக்கும் முத்து இதை பார்த்து முடிக்கலையா என்கிறார். இன்னும் கொஞ்சம் தான் இருக்கும் என்கிறார் மீனா. இதை தொடர்ந்து அவருக்கு காப்பி கலக்கி எடுத்து வருகிறார் முத்து.

மீனா வாங்கி குடிக்க சிறிது நேரம் கழித்து காபியில் சீனி போடாமல் இருப்பதை தெரிந்து கொள்கிறார். கொடு சீனி போட்டு தரேன் என அவர் கூற இல்லை உங்க அக்கறையே இனிக்குது எனச் சொல்லி அதை குடித்து கொண்டு இருக்கிறார். பின்னர் மாலையெல்லாம் கட்டி வண்டியில் ஏற்றி அனுப்புகின்றனர். டிரைவர் காதலியிடம் பேசிக்கொண்டே இருக்க முத்து போனை வச்சிட்டு கவனமா போ எனச் சொல்லி அனுப்பி விடுகிறார்.

சிட்டியின் ஆட்கள் வண்டி பின்தொடர்கின்றனர். வழியில் பஞ்சர் எனக் கூறி டிரைவரை திசை திருப்பி விட்டு சிட்டி ஆட்கள் மாலை இருக்கும் வண்டியை அடித்து விடுகின்றனர். பின்னர் சிட்டிக்கு விஷயத்தினை சொல்ல அவன் ஊர் எல்லை தாண்டி எல்லா மாலையையும் போட்டு எறித்து விடு என்கிறான்.

அடுத்து, மினிஸ்டர் எல்லா ரெடியா எனக் கேட்கிறார். மாலை வரலை எனக் கூற முத்து நண்பரை அழைத்து மாலை வராத விஷயத்தினை கூறுகிறார். அவர் முத்துவுக்கு கால் செய்து கேட்க வந்திருக்கணுமே என்ற சந்தேகத்தில் போனை பார்க்க டிரைவரே 10 முறை கால் செய்து இருக்கிறார்.பதறி அடித்து முத்து கால் செய்து கேட்க வண்டியை யாரோ தூக்கிட்டதா சொல்கிறார்.

இதனால் மீனாவும், முத்துவும் அந்த இடத்துக்கு வந்து வண்டியை தேடுகின்றனர். அப்போ மினிஸ்டர் கால் செய்து இன்னும் அரை மணி நேரத்தில் மாலை வரலை உன்னையும், உன் நண்பனையும் காலி பண்ணிடுவேன் என மிரட்டுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top