Connect with us
archana

Biggboss Tamil 7

உள்ளே போனதும் நிக்‌ஷனை பார்த்து கேட்ட ஒரே ஒரு கேள்வி! பொங்கி எழுந்த அர்ச்சனாவின் அப்பா

BiggBoss: இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7. 18 போட்டியாளர்களுடன் களம் கண்ட இந்த சீசன் இதுவரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆரவாரமாக போய்க் கொண்டிருக்கிறது.

நாள்தோறும் எதாவது ஒரு பிரச்சினை, சண்டை என போட்டியாளர்களின் சத்தம் வீட்டிற்குள் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக புல்லி கேங்காக மாயாவும் பூர்ணிமாவும் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.

இதையும் படிங்க: யாருக்கும் தெரியாது.. அந்தப் படத்தில் நான்தான் ஹீரோ – ஷாக் கொடுத்த செந்தில்! அப்போ அவரு?

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில்  ‘ஃபிரீஸ் டாஸ்க்’ ஆரம்பமாகின்றது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருக்கின்றனர். போட்டியாளர்கள் 75 நாள்களை கடந்து வீட்டிற்குள் இருப்பதால் அவர்களும் இந்த டாஸ்க்கைத்தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பூர்ணிமாவின் அம்மா உள்ளே வர நேராக விசித்ராவிடம் பூர்ணிமாவிற்காக மன்னிப்பு கேட்கிறார். அதை பார்த்ததும் பூர்ணிமாவிற்கே ஷாக் ஆகி விடுகின்றது. அதனை தொடர்ந்து அர்ச்சனாவின் அம்மா மற்றும் அப்பா இருவரும் உள்ளே வருகிறார்கள்.

இதையும் படிங்க : இவனுக்கு நடிப்பே வராது.. அந்த நடிகரை கூட்டி வாங்க!.. ரஜினியை மோசமாக திட்டிய பாலச்சந்தர்…

அதில் அர்ச்சனாவின் அப்பா நிக்‌ஷனை பார்த்து என் பொண்ணை  ‘கள்ளி பாலை ஊத்தி அப்பவே கொன்றுக்கனும் ’ என்று சொன்னதும் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது என்று சொல்ல அதற்கு நிக்‌ஷன் ‘என்னது நானா? அப்படி சொல்லவே இல்லையே’ என்று கூறுகிறார்.

ஆனாலும் அர்ச்சனாவின் அப்பா ‘இல்ல அப்படித்தான் சொன்னீங்க. அப்படியெல்லாம் பேசாதீங்க. ரொம்ப வருத்தப்பட்டேன்’ என்று கூற அதற்கு நிக்‌ஷன் சரி சரி மன்னிச்சிடுங்க என்று கூறினார்.

இதையும் படிங்க: ரஜினியின் மனதுக்குள் சினிமா ஆசையை விதைத்த தோழி!.. இதுவரை வெளிவராத தகவல்!..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top