Connect with us
ajith and trisha

Cinema News

அஜித்தால பறிபோன பாலிவுட் பட வாய்ப்பு!.. தலையில் அடித்து கொள்ளும் திரிஷா!.. வட போச்சே!..

Actress Nayanthara: நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமனார். அறிமுகமான முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பின் இவர் ராஜா ராணி, அறம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். தனது அயராத உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தையும் பெற்றார். இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் முடித்தார். தற்போது இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.

இதையும் படிங்க:பிரபல இயக்குனரை கல்யாணம் செய்தாரா சாய் பல்லவி?… வைரலாகும் புகைப்படம்… அடேய்களா!

இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிக பெரிய வெற்றியையும் கண்டது. இத்திரைப்படத்திற்கு பின் நயன்தாராவின் புகழ் உச்சத்தை எட்டியுள்ளதாம். இவருக்கு தமிழ் படங்களை தாண்டி பல பாலிவுட் பட வாய்ப்புகளும் வருகின்றதாம்.

இவரின் இத்தகைய வளர்ச்சியினால் தமிழ் நடிகைகள் பலருக்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி நடிகை திரிஷாவுக்கு பாலிவுட் சினிமா வாய்ப்பு வந்துள்ளதாக தெரிகிறது. பாலிவுட்டின் பிரபல இயக்குனரான கரன் ஜோஹர் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட் திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க:லோகேஷ் வச்சா ஒன்னு… மூணை காட்டி மொத்தமாக சுருட்டிய ஆதிக்… என்னங்க பாஸ் இப்படி இறங்கிட்டீங்க?

அப்படத்திற்கு திரிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஆனால் அப்படத்தின் படபிடிப்பு தேதி இவருக்கு சரிபட்டு வரவில்லையாம். ஏனென்றால் அந்த தேதியும் அஜித் நடிப்பில் தயாராகவிருக்கும் விடாமுயற்சி படபிடிப்பின் தேதியும் ஒன்றாக வருவதால் திரிஷாவால் அப்படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

இதனால் திரிஷாவிற்கு பதிலாக சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளனராம். மேலும் சமந்தாவும் அதற்கு சம்மதம் கூறிவிட்டாராம். விடாமுயற்சி திரைப்படம் திட்டமிட்டபடி நடந்திருந்தால் அப்படத்தின் படப்பிடிப்புகள் இந்த நேரம் முடிந்திருக்கும். ஆனால் அஜித்குமார் அதற்கு ஒத்துழைக்காமல் போனதால் படத்தினை இன்னும் ஆரம்பிக்ககூட இல்லை. இது திரிஷாவின் அருமையான வாய்ப்பை இழக்க வைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். இவ்வாறு இருக்க நயன்தாராவின் இத்தகைய வளர்ச்சியினால்தான் தமிழ் கதாநாயகிகள் அனைவரும் பாலிவுட் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க:ஆதி குணசேகரனே வேணாம்.. டிவி தொடரின் ஆச்சரிய முடிவு… அப்போ சீரியல் கதி என்னவோ?

google news
Continue Reading

More in Cinema News

To Top