Cinema News
நீங்க பேசுனா எனக்கு தான் ஆபத்து…! செட்டில் திரிஷாவை பேசவிடாமல் செய்த மணிரத்னம்…யாரு கூடனு தெரியுமா..?
Published on
By
தமிழ் சினிமாவில் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இப்பொழுது தான் திரிஷாவை பழைய ஃபார்மில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு 96 படத்தில் நடித்தார், அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தான் மீண்டும் திரிஷாவை காண இருக்கிறோம்.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை திரிஷா. இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்ததை நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் திரிஷா பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்கள் : நம்பியார் யாருக்கும் உதவி செய்யமாட்டார்… ஏன் தெரியுமா?
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பற்றியும் திரிஷா கூறினார். அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சரியான நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும் கூறினார்.
மேலும் செட்டில் நானும் ஐஸும் நல்ல ஜாலியாக பேசிக் கொண்டு இருப்போம். இந்த படத்தின் மூலம் எங்கள் நட்பு கூடுதல் பலம் பெற்றது. படப்பிடிப்பு போக ஐஸும் நானும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மணி சார் வந்து தயவுசெய்து நீங்கள் நெருங்கி பழகாதீர்கள் என்று கூறுவார். ஏனெனில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய காட்சிகளே குந்தவைக்கும் நந்தினிக்கும் இடையே ஏற்படும் மோதல். அதனால் நீங்கள் இருவரும் இந்த மாதிரி நெருங்கி ஜாலியாக பழகினால் அது காட்சியை சில சமயம் கெடுத்துவிடும் என்று கூறுவாராம். இதை திரிஷா கூறினார். இதன் மூலம் எந்த அளவுக்கு படத்தை தத்ரூபமாக செதுக்கியிருக்கிறார் மணிரத்னம் என்று தெரிகிறது.
கோலிவுட்டே கவினின் ஸ்டார் படத்தை மலை போல நம்பி இருந்த நிலையில், முதல் நாளிலேயே ஸ்டார் படத்தின் வசூல் டல் அடித்த...
இந்த வாரம் வெளியான ஸ்டார் படத்தில் நாயகனாக நடித்த கவின் அடுத்ததாக நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் பிளடி பெக்கர் படத்தில்...
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான்...
எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்களுக்கும் அவர்களது படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு அவர் பட்ட பாடு...
இயக்குனர் ராதாபாரதி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவரது இயக்கத்தில் முதல் படமே சக்கை போடு போட்டது. அது பிரசாந்த் நடித்த...