Connect with us
vadi

Cinema News

இன்னும் யார் குடியெல்லாம் கெடுத்தாரோ? விதார்த்துக்கு கிடைத்த வாய்ப்பை கெடுத்த வைகை புயல்

Vadivelu:  நடிகர் வடிவேலு ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுதுதான் மீண்டும் படங்களில் தலை காட்டி வருகிறார். சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் ஒரு முழு நீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முன்பு பார்த்த வடிவேலு கண்ணில் படவில்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

ஆனாலும் அவருக்குள்ளும் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை மாரிசெல்வராஜ் ஆணித்தரமாக வெளிச்சம் போட்டுக் காட்டினார். மாமன்னன் திரைப்படத்தில் அதுவரை பார்க்காத வடிவேலுவை பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: வேறொரு நல்ல ஆர்ட்டிஸ்ட போட வேண்டியதுதானே? சரத்குமாரால் கடுப்பான அந்த டாப் நடிகை

ஆனால் ஆரம்ப கால வடிவேலுவை இனிமேலும் பார்க்க முடியுமா என்றால் சந்தேகம்தான் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏனெனில் நகைச்சுவை நடிகனாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவரை சுற்றியே ஒரு சில குரூப் இருக்கும்.

வடிவேலு மெயின் காமெடி நடிகராகவும் மற்ற சின்ன சின்ன நடிகர்கள் இவருக்கு செம்பு தூக்கிகளாகவும் வருவார்கள். அது பார்ப்பதற்கும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆனால் தன்னுடன் நடித்த அந்த சக நடிகர்களிடம் சில பல பிரச்சினைகளில் மாட்டி அனைவரும் இவருக்கு எதிராக திரும்பிவிட்டனர்.

இதையும் படிங்க: எதை பார்த்தாலும் எச்சில் ஊறுதே!.. பூஜா ஹெக்டேவுக்கு பொறந்தநாள்.. பக்கா ட்ரீட் இதோ!..

வடிவேலுவை எப்படியெல்லாம் திட்டனுமோ அதற்கும் மேலாக பேசி தங்கள் மனக்குமுறலை பல நடிகர்கள் கொட்டி தீர்த்தனர்.இந்த வரிசையில் நடிகர் விதார்த்தும் சேர்ந்திருக்கிறார். விதார்த், விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இறுகப்பற்று.

அந்தப் படத்தை எடுத்தவர் தயாளன். இன்று அந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் தயாளன் விதார்த்தை பற்றி பேசும் போது ‘ நானும் விதார்த்தும் 13 வருடங்களுக்கு முன்பு ஒரு படம் பண்ண வேண்டியது. மைனா முடித்து விதார்த்துக்கு அது இரண்டாவது படம்.

இதையும் படிங்க: லியோவுக்கு அடுத்த ஆப்பு!.. அதிகாலை காட்சி இல்லை!. முதல் காட்சி நேரம் இதுதான்!..

நானும் போட்டா போட்டி முடித்து எனக்கும் இரண்டாவது படம். எங்கள் கூட்டணியில் அமைய இருந்த அந்தப் படத்திற்கு சூட்டிங் ஆரம்பமாக 10 நாள்கள்  இருந்த நிலையில் வடிவேலும் ஏ.ஜி.எஸும் சேர்ந்து அந்தப் படத்தை அப்படியே டிராப் பண்ணுங்க, நாம சேர்ந்து பண்ணுவோம்’ எனக் கூறினார்களாம்.

இதை விதார்த்திடம் தயாளன் வந்து கூற ‘அதையே போய் பண்ணு. பெரிய படம் உனக்கு’ என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். அந்தப் படம் தான் தெனாலிராமன். அதன் பிறகு ஒரு நாள் விதார்த்தும் தயாளனும் பேசிக் கொண்டிருந்த போது அன்றைக்கு அந்த படத்தின் மூலம் நாம் இணைந்திருந்தால் நீயும் உருப்படியா இருந்திருப்ப, நானும் உருப்படியா இருந்திருப்பேன் என்று கூறி சிரித்துக் கொண்டார்களாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top