More
Categories: Cinema News Jagan latest news

வடிவேலு என் காலில் விழுந்தார்!. பல வருடங்கள் கழித்து உண்மையை சொன்ன பரத்வாஜ்!..

நடிகர் வடிவேலு ஏராளமான படங்களில் நடித்து, இன்று வரை நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் காமெடி செய்து சிரிக்க வைப்பதோடு மட்டுமில்லமல் நல்ல நடிகரும் கூட. அதை மாமன்னன் படத்தின் மூலம் அவர் நிரூபித்துவிட்டார்.

அந்த படத்தில் அவர் ‘மலையில தான் தீ பிடிக்கிது ராசா’ பாடலையும் பாடியிருப்பார். அந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே வடிவேலு சில பாடல்களை பாடியுள்ளார். பார்த்திபன் வடிவேலு, லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான படம் குண்டக்க மண்டக்க.

Advertising
Advertising

அந்த படத்தில் வடிவேலு பாடிய படத்தில் வரும் வந்துட்டான்யா பாடலும் செம ஹிட் பாடல் தான். அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடலாக இது இருந்தது. இந்த பாட்டில், வடிவேலு நன்றாக டான்ஸ் ஆடியிருப்பார். இந்த பாடலை உருவாக்கிய போது, நடந்த சுவாரசியமான விஷயங்களை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- கமலின் படத்தை பார்த்துவிட்டு நைட் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு போன ரஜினி!.. நடந்தது இதுதான்!…

முதலில் இந்த பாட்டிற்கு லிரிக்ஸ் வந்தவுடன், மெட்டு போட்டுவிட்டு, வடிவேலுவை அழைத்தோம். அவர் வந்தவுடன். ஒரு முறை நான் பாடி காட்டினேன். அதை அவர் ரிபீட் செய்தார். முழு பாடலையும் ஒரு முறை அப்படி எடுத்து முடித்தோம்.

அதன் பிறகு அந்த பாடலை அவர் பாட தயாராகி கொண்டிருந்தார். அதற்குள்ளாகவே, வெறும் 5 நிமிடத்தில், அவர் ரிகர்சலுக்கு பாடியதை வைத்தே எடிட் செய்து, பாடலை ரெடி பண்ணி, அவருக்கு போட்டு காட்டினோம்.

அதை கேட்டு அவர் அசந்து போய்விட்டார். ஆச்சர்யத்தில் வந்து என் காலில் விழுந்து வணங்கினார். எப்படி நீங்க இப்படி செய்தீர்கள் என்று கேட்டார். அந்த நேரத்தில் தான் எனக்கு அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. ஒரு பெரிய நடிகர் இப்படி செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- பிரதாப் போத்தனை பழிவாங்க இப்படியெல்லாமா செய்வாங்க? சமுதாயம் குட்டிச்சுவர் ஆனதுக்கு காரணமே ராதிகாதான்

Published by
prabhanjani