More
Categories: Cinema History Cinema News latest news

என்ன மீறி நடிக்கிறியா நீ!.. சக நடிகரை ஓங்கி அறைந்த வடிவேலு.. இவ்வளவு காண்டா!..

நடிகர் ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகமானவர் வடிவேலு. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. கவுண்டமணி, செந்தில் சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு வந்தார் என்றாலும் அதற்கு பிறகு அவருக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.

Advertising
Advertising

தமிழில் உள்ள அனைத்து முக்கிய நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார் வடிவேலு. அதன் பிறகு வடிவேலு அரசியலுக்கு சென்றபோது தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் முயற்சித்து வந்தாலும் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாகும் ஒரு படத்தை வடிவேலுவால் நடிக்க முடியவில்லை.

இதற்கு நடுவே அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார் வடிவேலு, அவருடன் பணிப்புரிந்த சக நடிகர்களே அவரை குறித்து அவதூறாக பேசி வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு வடிவேலு குறித்து சர்ச்சையான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

கடுப்பான வடிவேலு:

வடிவேலு ஒரு படத்தில் ஏட்டு ஊமத்துரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் பெண் ஒருவரை அவர் பிடிக்க செல்வது போன்ற காமெடி வரும். அந்த காமெடி காட்சி படமாக்கும்போது புதிதாக ஒரு நபர் அதில் இருந்ததை வடிவேலு பார்த்துள்ளார்.

Vadivelu

உடனே இயக்குனரிடம் யார் இவர்? என கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் இவர் புதிதாக வாய்ப்பு தேடி வந்துள்ளார் என கூறியுள்ளார். பிறகு படப்பிடிப்பு நடக்கும்போது அவரை முகத்திலையே அறைந்துள்ளார் வடிவேலு.. என்னை தாண்டி நடிக்கிறியா நீ என கேட்டுள்ளார். இதை படப்பிடிப்பில் நேரில் கண்டதாக செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அவர் செஞ்சது தப்பு! பாலுமகேந்திராவின் ஆன்மாவை கூட மன்னிக்க மாட்டேன்! நடிகை பேட்டி

Published by
Rajkumar

Recent Posts