More
Categories: Cinema News latest news

இது சமாதி இல்லை சன்னதி!..ரஜினிக்கு தாஜ்மகால்.. வடிவேலு கோயிலாகவே மாத்திட்டாரே!.. அங்க போகலையா?

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு மண்டபம் மெரினா கடற்கரையில் பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில், அந்த நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அந்த நினைவு மண்டபத்தை பார்த்து விட்டு வந்த அவர், இது கலைஞரின் தாஜ்மகால் என புகழ்ந்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னைக்கு வந்த வைகைப்புயல் வடிவேலு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற நிலையில், அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பேசியது வைரலாகி வருகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கோடிகளில் புரளும் இளம் இயக்குனர்கள்!. லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியா?!..

இது சமாதி இல்லை சன்னதி என்றும் திமுகவினருக்கு இதுதான் குலதெய்வ கோயில் என்றும் கூறினார் வடிவேலு. கருணாநிதி ஐயா அருகிலேயே அமர்ந்து பேசுவது போன்ற வீடியோ அமைப்புகள் வேறலெவலில் மெய் சிலிர்க்க வைத்து விட்டதாக கூறியுள்ளார்.

அனைவரும் வந்து பாருங்க, ஃப்ரீ தான் என பேசிய வடிவேலு, இந்த இடத்துக்கு வந்தது என் பாக்கியமாக கருதுகிறேன். திமுக எனும் பிரம்மாண்ட கோட்டையை கட்டியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இப்படியொரு இடத்தை கட்டியமைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அட நம்ம தளபதி இந்த மாஸ் படங்கள்ல மட்டும் நடிச்சிருந்தா!.. அவரு லெவலே வேற!.. வட போச்சே…

விஜயகாந்த் நினைவிடத்துக்கு வடிவேலு இன்னமும் செல்லாமல் எப்படி தட்டிக் கழிக்கிறாரு பாருங்க என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts