Categories: latest news

அந்த சித்தப்பா நான் இல்லைங்கோ?!.. நான் வேற… பதறிப்போய் ட்வீட் போட்ட வலைப்பேச்சு அந்தணன்..!

சோசியல் மீடியாக்களில் ஸ்ரீகாந்தின் சித்தப்பா வலைப்பேச்சு அந்தணன் என்று கூறி வந்த நிலையில் அதற்கு அந்தணன் பதிலளித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், கனா கண்டேன், பம்பரக்கண்ணாலே, துரோகி, பூ, நண்பன் உங்களுடைய ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: Vidamuyarchi: காலைல ஆரம்பிச்சு சாயங்காலம் முடியுற கதை.. ‘விடாமுயற்சி’ பற்றி சூப்பரான அப்டேட் கொடுத்த பிரபலம்

தொடக்கத்தில் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த இவர் பின்னர் தொடர் தோல்விகளை கொடுத்த காரணத்தால் சினிமாவில் ஓரம் கட்டப்பட்ட நடிகராக மாறிவிட்டார். இருப்பினும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றார். தற்போது கூட ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் பிரபல யூட்யூப் சேனலுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘மனதெல்லாம் என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

நான் மணிரத்தினம் சாரை முதல் முறையாக அப்போதுதான் சந்தித்தேன். அவர் என்னை டெஸ்ட் சூட் எடுக்க வேண்டும் என்று கூறினார். முதலில் ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு டெஸ்ட் செய்தார்கள். அதன் பிறகு மணி சாரிடம் உதவி இயக்குனராக இருந்த சுதா கொங்குராவிடம் நான் டயலாக் சொல்லிக் கொண்டிருந்தேன். எங்களுக்கு கதை தெரியாது.

ஒப்பந்தம் போடும்போது தான் கதை கூறப்படும். நீண்ட நாட்களாக ஒரு சிட்டி பாய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் அப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த சமயத்தில் தான் தனக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னை கேட்காமல் எனது மேனேஜராக இருந்த என்னுடைய சித்தப்பா மணிசாரின் படத்திற்கு நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.

உடல் நலம் சரியானதற்கு பிறகு தான் நடந்த சம்பவத்தை கூறினார்கள். அப்போது எனது சித்தப்பாவிடம் நான் சண்டை போட்டேன். எதற்காக இப்படி செய்தீர்கள் என்று, அப்போது அவர் ஏற்கனவே கமிட்டான திரைப்படத்தில் நடித்து முடிக்காமல் வேறு படத்தில் நடிக்க விட மாட்டேன் என்று அந்த இயக்குனர் கூறிவிட்டதாக தெரிவித்தார். அந்த அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டேன்’ என்று பேசியிருந்தார்.

இதையும் படிங்க: Kanguva: இதையாடா இவ்வளவு நாள் ஒட்டிக்கிட்டு இருந்தீங்க!.. கங்குவாவை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஃபேன்ஸ்…

இதை பார்த்த பலரும் அந்த சித்தப்பா வலைப்பேச்சு அந்தணன் தான் என்று கிளப்பி விட்டார்கள். மேலும் ஆயுத எழுத்து திரைப்படத்தில் மட்டும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தால் தற்போது முன்னணி நடிகராக சினிமாவில் இருந்திருப்பார் என்று கூறி வந்தார்கள். இதை பார்த்த வலைப்பேச்சு அந்தணன் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘சித்தப்பா நான் இல்லை.. நான் வேற.. சித்தப்பா வேற’.. என்று கூறியிருந்தார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

ramya suresh

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago