Director Gautham Menon: தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் ஒரு இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இயக்குனராக ரசிகர்களை கவர்ந்த இவர் இப்போது ஒரு நடிகராகவும் தன்னை யார் என நிருபித்து வருகிறார். பல படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை அசால்ட்டாக தட்டி சென்று விடுகிறார். இவருக்கு என தமிழ் சினிமாவில் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றனர்.
இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜோஷ்வா. ஐசரி கணேஷ் தயாரிப்பில் வருண் நடிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வியை தழுவியது. இதை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி பல காரசாரமான தகவல்களை கூறினார். அதாவது இது நாள் வரை கௌதம் மேனன் மற்றவர்களின் சரக்கை வைத்தே வண்டியை ஓட்டி கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: நயன்தாரா மேல இவ்வளவு லவ்வா?!.. பிரதீப் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸில் விக்கி செய்த வேலை!..
இப்பொழுதுதான் தனது சொந்தச் சரக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவும் எப்படிப்பட்டது என அனைவருக்கும் தெரிந்திருக்கும் என பிஸ்மி கூறினார். அதாவது கௌதம் மேனன் பெரிய நடிகர்களின் நிழலிலேயே தஞ்சம் அடைந்து பெயரை எடுத்தவராம். ஜோஷ்வா படத்தின் மூலம்தான் அவரின் குட்டு என தெரிந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் ஜோஷ்வா படத்தின் பின்னனியிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறதாம்.
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்த கௌதம்மேனனுக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் ஐசரி கணேஷ். அதனால் இதற்கு பதிலாக தன் கம்பெனிக்கு மூன்று படங்களை எடுத்து தருமாறு கேட்டிருந்தாராம் ஐசரி. அதன் அடிப்படையிலேயே வெந்து தணிந்தது காடு படம் உருவாகியிருக்கிறது. அடுத்ததாக வெளியான படம்தான் ஜோஷ்வா.
இதையும் படிங்க: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க போவது இந்த முன்னணி நடிகரின் மகனா? இது வேற ரூட்டால இருக்கு!..
இந்தப் படத்தின் மூலம் எப்படியாவது தன் அக்கா மகனை ஹீரோவாக நடிக்க வைத்து ஜெயித்து விட வேண்டும் என்று எண்ணியே வருணை நடிக்க வைத்திருக்கிறார் ஐசரி. ஆனால் கௌதம் செஞ்ச வேலையால் வருணின் வாழ்க்கையே போய்விட்டது என பிஸ்மி கூறினார். ஒரு நன்றிக்கடன் பட்டவராக கௌதம் மேனன் இருந்து நல்ல கதையை அல்லவா கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஏதோ கதைகளை எடுத்து சொதப்பி வைத்திருக்கிறார் என பிஸ்மி கூறினார்.
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…