Connect with us
vanitha

Biggboss Tamil 7

வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான! வனிதாவை பந்தாடிய அந்த கும்பல் – ஓ அதுதான் காரணமா?

Actress Vanitha Vijayakumar: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து காணாமல் போனவர்தான் வனிதா விஜயகுமார். திருமண வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னமாகி ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்து தற்போது குழந்தைகளுக்காக வாழ்ந்து  கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ,பிக்பாஸ் நிகழ்ச்சி என பெரிய பிளாட்ஃபார்மில் கால்பதித்து மீண்டும் பிரபலமானார் வனிதா. அதன் மூலம் வந்த பாப்புலாரிட்டியால் மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஓடிடி தளத்தை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்த லியோ!.. ஆல் லேங்குவேஜ்லயும் அண்ணா கில்லிடா!..

தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தன்னுடைய மூத்த மகளான ஜோவிகாவை அனுப்பி வைத்து அதன் மூலம் தன் மகளையும் சினிமாவிற்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராகவும் இருந்து வருகிறார்.

நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை வைத்து சக போட்டியாளர்களை பற்றியும் அவர்கள் நடந்து கொள்ளும் முறை பற்றியும் தனக்கே உரிய பாணியில் விமர்சித்து வரும் வனிதா திடீரென தன் இன்ஸ்டா பக்கத்தில் அவர் புகைப்படத்தை போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. அனிமல் பட இயக்குநர் பெண்களை அடிக்காமல் இருக்க முடியாதாம்.. வைரலாகும் வீடியோ!

அதில் அவருடைய கண், கன்னம் எல்லாம் வீங்கி போய் யாரோ அடித்தாற் போல இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒரு விளையாட்டு நிகழ்ச்சிதான். இது சரியான முறை இல்லை. வன்முறையை கையாளுவதும் மிகத் தவறு என பதிவிட்டிருக்கிறார் வனிதா.

இந்த பதிவின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தின் போது யாரைப் பற்றியோ தவறுதலாக இவர் சொல்லப் போய் சம்பந்தப்பட்ட கும்பல் இவரை தாக்கியிருக்கிறார்களோ என தெரிகிறது. ரசிகர்களும் அந்த கமெண்ட்டில் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தால் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சிவக்குமார் நடிப்பிற்கு முழுக்கு போட காரணமே அந்த நடிகைதான்!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..

மேலும் தன்னுடைய வலைதள பக்கத்தில் வனிதா ஒரு வேளை பிரதீப் ஆண்டனியின் சப்போர்ட்டர்ஸாக கூட இருக்கலாம் என கூறி நடந்த சம்பவத்தை விவரித்திருக்கிறார். பிக்பாஸ் விமர்சனத்தை முடித்து விட்டு திரும்பும் போது அவருடைய காரை பார்க் செய்து கொண்டிருந்தாராம். அப்போது திடீரென ஒருவர் வனிதாவிடம் வந்து ‘ரெட் கார்டா கொடுக்கிறீங்க’ எனக் கேட்டு அடித்ததாக கூறியிருக்கிறார். அதனால் அதுயார் என்பது கடவுளுக்கு தெரியும் என வனிதா குறிப்பிட்டிருக்கிறார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top