Categories: latest news

பிறந்தநாளின் போது இப்படியா சாபம் விடுறது? அருண்விஜயை லெஃப்ட் ரைட் வாங்கிய வனிதா

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அருண் விஜய் .பிரபல குணச்சித்திர நடிகர் ஆன விஜயக்குமாருக்கும் அவருடைய முதல் மனைவியான முத்துகண்ணுவுக்கும் மகனாக பிறந்தவர் தான் அருண் விஜய். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் 1995 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து காத்திருந்த காதல்,,கங்கா கௌரி, பிரியம், துள்ளித் திரிந்த காலம், அன்புடன் என பல படங்களில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தாலும் சொல்லும் படியான ஒரு ஹீரோ அந்தஸ்து அவருக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து பாண்டவர் பூமி என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார் அருண் விஜய்.

இதையும் படிங்க: இது நடக்கும் என நினைத்தேன்… கனத்த இதயத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு… எப்படி இருந்த மனுஷர்?

அதனைத் தொடர்ந்தும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமைந்ததா என்றால் இல்லை.கொஞ்சம் காலம் சினிமாவை விட்டு விலகி இருந்ததைப் போல காணாமல் போயிருந்தார் அருண் விஜய். அப்பொழுதுதான் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .அதுவும் விக்டர் என்ற ஒரு மாசான வில்லன் கதாபாத்திரம். மிகவும் ஸ்டைலாக நடித்திருந்தார் அருண் விஜய்.

அந்த படத்திற்கு பிறகு தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் .அந்தப் படம் அருண் விஜய்க்கு ஒரு பெரிய சூப்பர் ஹிட் படமாக மாறியது. தற்போது பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

vanitha

இதையும் படிங்க: ஆவணப்படம்னா உண்மையைச் சொல்லணும்… கோயம்பேடு ஆம்னி பஸ் மறந்துடுச்சா நயன்தாரா?

அது பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்தப் படம் மட்டும் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தால் அருண் விஜயின் கெரியரே மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது 47வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் .அவர் எப்பொழுதும் தனது பிறந்த நாளின் போது ரத்ததானம் கொடுப்பது வழக்கம். அதைப்போல நேற்று அவர் ரத்ததானம் கொடுத்திருந்தார்.

அதை டேக் செய்து அவருடைய சகோதரி வனிதா விஜயகுமார் இன்ஸ்டா ஸ்டோரியில் சாபம் விடுவது போல ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். வனிதா விஜயகுமாரும் விஜயகுமார் குடும்பமும் சில ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகின்றனர் .சொத்து பிரச்சினை காரணமாக விஜயகுமார் குடும்பத்திற்கும் வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வனிதா மட்டும் தற்போது தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் தான் அருண்விஜயின் அந்த ரத்த தானத்தை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா. நீங்கள் வெளியில் ரத்ததானம் கொடுப்பதற்கு முன்னாடி உங்களுடைய சொந்த இரத்தத்திற்கு கொடுக்க வேண்டிய நியாயமான உரிமையையும் சொத்தையும் கொடுங்கள். சொந்த ரத்தத்தோட சாபத்தை வச்சுக்கிட்டு மத்தவங்களோட புண்ணியத்தை தேடுவது வேஸ்ட் பிரதர் என பதிவிட்டு இருக்கிறார்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago