Connect with us
jai bhim

Cinema News

அழுகையை நிறுத்த முடியவில்லை.. ஜெய்பீம் படத்தை பாராட்டிய இயக்குனர்..

வெயில் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் வசந்தபாலன். அவர் இயக்கிய அங்காடித்தெரு படமும் ஒரு சிறந்த கலைப்படைப்பாக வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜி.வி.பிரகாஷை வைத்து ஜெயில் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

j

இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை பார்த்த அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜெய்பீம் பார்த்து விட்டு வெடித்துக் கொண்டு வருகிற அழுகையை நிறுத்த வழி தெரிய வில்லை.சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை மீண்டும் உணரமுடிகிறது. வாழ்த்துக்கள் சூர்யா’ என பதிவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார்.

vasantha

விழுப்புரம் அருகே வாழும் இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு (பின்னாளில் நீதிபதி சந்துரு) என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை கதையை திரைக்கதை ஆக்கியுள்ளனர். வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top