வீர தீர சூரன் படம் எப்படி இருக்கு?!.. வெளியான முதல் விமர்சனம்!.. பிரபலம் போட்ட டிவிட்!..

#image_title
Veera Dheera Sooran: சியான் விக்ரமின் 62வது படமாக உருவாகியிருக்கிறது வீர தீர சூரன். கடந்த சில வருடங்களாக விக்ரமுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. எனவே, வீர தீர சூரன் படத்தை நம்பியிருக்கிறார். இந்த படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி, சிந்துபாத் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் சித்தார்த் நடிப்பில் வெளியாகி பலரையும் கலங்க வைத்த சித்தா படத்தையும் இவர்தான் இயக்கியிருந்ந்தார். இந்த படத்தை பார்த்துவிட்டுதான் சியான் விக்ரம் அருணை அழைத்து பாராட்டி தனக்கென ஒரு கதையை உருவாக்க சொல்லியிருக்கிறார். அப்படி உருவான கதைதான் இப்போது வீர தீர சூரன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

#image_title
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்க, விக்ரமுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை இது.
வழக்கமாக முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரை புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இதனாலேயே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
அதோடு முதன்முறையாக விக்ரம் - எஸ்.ஜே.சூர்யா காம்போவை பார்க்கும் ஆவலும் ரசிகர்களுக்கு இருக்கிறது. வீர தீர சூரன் படம் வருகிற 27ம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கிஸ் உரிமையாளர் அருண் விஷ்வா படம் பற்றிய முதல் விமர்சனத்தி எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

#image_title
எஸ்.யூ அருண்குமார் என்கிற பெயரை நினைவில் வைத்துகொள்ளுங்கள். இது புரமோஷனுக்காக போடப்படும் டிவிட் இல்லை என பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்டிருப்பதை பார்க்கும்போது படம் சிறப்பாக வந்திருப்பதைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது புரிகிறது. விக்ரம் ரசிகர்கள் இதை பகிர்ந்து படம் கண்டிப்பாக ஹிட் என்றே பதிவிட்டு வருகிறார்கள்.