கொஞ்சம் கூட பிசிறாமல் சொல்லி அடித்த சீயான் விக்ரம்! வீர தீர சீரன் விமர்சனம்!

by Akhilan |   ( Updated:2025-03-30 22:03:22  )
கொஞ்சம் கூட பிசிறாமல் சொல்லி அடித்த சீயான் விக்ரம்! வீர தீர சீரன் விமர்சனம்!
X

Veera Dheera Sooran

VeeraDheera Sooran: நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குறித்து சூப்பர் திரை விமர்சனம் இதோ!

இன்று காலை வெளியாக இருந்த வீரதீர சூரன் திரைப்படம் பைனான்ஸ் நெருக்கடியால் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றது. பலகட்ட போராட்டத்திற்கு பின் மாலை தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் எஸ் ஜே சூர்யா தன்னுடைய பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு ரவி மற்றும் கண்ணனை கொலை செய்ய முடிவு எடுக்கிறார். இதை அறிந்த சுராஜ் தன்னை காப்பாற்றிக்கொள்ள விக்ரமிடம் உதவியை கேட்கிறார்.

அவரும் ஒப்புக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யாவை கொன்றுவிட்டால் தப்பித்து விடலாம் என விக்ரமிடம் திட்டம் போட்டுக் கொடுக்க அவர் என்ன சொன்னார் கடைசியில் என்ன ஆனது. ஏன் எஸ் ஜே சூர்யாவிற்கு இந்த கொலைவெறி என பரபரப்பாக செல்வதுதான் இக்கதை.

பொதுவாக ஒரு பிரபலம் அதீத நடிப்பு உள்ளவர்களாக இருந்தாலே சமாளிக்க முடியாது. விக்ரம், சுராஜ், எஸ்.ஜே.சூர்யா என மூவருமே நடிப்பில் பட்டையை கிளப்புகின்றனர். இதில் யாரை பார்ப்பது யாரின் ரியாக்ஷனை விடுவது என குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் அருண்குமார் தன்னுடைய கதையில் ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்ததால் தான் இரண்டாவது பாகம் வெளியாகியிருக்கிறது. அவருடைய நம்பிக்கை எந்த இடத்திலும் ஓவராக செல்லாமல் சரியாக தேவையான இடத்தில் தூண்டில் போட்டு நிறுத்தி இருக்கிறார்.

#image_title

எந்த இடத்திலுமே திரைக்கதை அலுப்பை தட்டவில்லை. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் போல எஸ் ஜே சூர்யா தன்னுடைய அக்மார்க் நடிப்பால் ஒரு பக்கம் கல்லாகட்டி விடுகிறார்.

அதுபோல ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் பழைய சீயான் விக்ரம் பல இடங்களில் தோன்றி மறைகிறார். இதில் பெரிய அளவு அப்பிளாஸ் வாங்கி இருப்பது மலையாள நடிகர் சுராஜ் தான். புது மொழியை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப அவர் கொடுத்திருக்கும் ரியாக்சன் வாவ்ரகம்.

அது மட்டுமில்லாமல் ஹீரோயினாக வரும் துஷாரா விஜயன் எப்போதும் போல தனக்கு கொடுத்த கேரக்டரை அல்வா போல் சாப்பிட்டு செல்கிறார். விக்ரமுடன் ரொமான்ஸ் செய்வதில் தொடங்கி அவர் ஆபத்து வரும் போது ஆக்ஷன் காட்டுவது வரை அம்மணி அடுத்த சூப்பர்ஸ்டாராகலாம்.

பெரிய அளவில் இடறல் இல்லாமல் கடந்து செல்கிறது திரைக்கதை. கிளைமேக்ஸ் ஒரே ஷாட்டில் எல்லாரும் நடித்து இருப்பதே படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இது முதல் பாகத்திற்கு சரியான ஹைப்பை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story