சீயான் ரசிகர்கள் என்னை மன்னிச்சிடுங்க.. எமோஷனலாக பேசிய வீர தீர சூரன் பட இயக்குனர்

arun
பல பிரச்சினைகளுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் இன்று மாலை வெளியாகும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படத்தில் விக்ரம், துஷாரா விஜயன் ,எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக ஒரே நாள் இரவில் நடக்கும் ஒரு கதையாக உருவாகி இருக்கிறது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதலில் இரண்டாம் பாகம் மட்டும் தான் இப்போது வெளியாக இருக்கின்றது .இந்த நிலையில் திடீரென இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஒரு நிறுவனம் நீதிமன்றத்தை கோரியது. ஏனெனில் இந்த படத்திற்கான ஒடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் ott உரிமம் விற்கப்படாமல் படத்தை வெளியிடுவதாக அந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இது சம்பந்தமான வழக்கு தான் தற்போது வரை நடந்தது. இந்த நிலையில் 7 கோடியை உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்மின் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அது மட்டுமல்ல 48 மணி நேரத்திற்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கெடுவிதித்திருந்தது. இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்த பிறகு இப்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
2.5 கோடி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். அதனால் இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு ஒரு எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதுவும் மாலை 5 மணிக்குள் இந்த ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. அதனால் வீர தீர சூரன் திரைப்படம் இன்று மாலை ஆறு மணி காட்சியாக வெளியிடப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் அருண்குமார் திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் .சீயான் விக்ரம் ரசிகர்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார். ஏனெனில் இந்த படத்தை பார்க்க அனைவருமே குறிப்பாக விக்ரம் ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி இருப்பீர்கள் .ஆனால் இப்படி ஒரு பிரச்சனையில் படம் வெளியிடாமல் போனது. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் இன்று மாலை இந்த படம் வெளியிடப்படுகிறது. தயவு செய்து போய் பாருங்கள் என்று மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்:https://www.instagram.com/reel/DHsyY6CCtLZ/?igsh=ZDk5dWptdnhkMXI0