More
Read more!
Categories: Cinema News latest news

ஆடை இல்லாமல் நடிக்கனும்- நடிகைக்கு கண்டிஷன் போட்ட வேலு பிரபாகரன்!

வேலு பிரபாகரன் தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் திகழ்ந்து வந்தவர். 1990களில் பல வித்தியாசமான சைன்ஸ் பிக்சன் த்ரில்லர் திரைப்படங்களை இயக்கிய வேலு பிரபாகரன், தனது நாத்திக கருத்துக்களை பரப்பும் வகையில் “கடவுள்” என்ற திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அதன் பின் இப்போது வரை பல திரைப்படங்களில் முக்கிய நடிகராக நடித்து வருகிறார்.

Velu Prabhakaran

வேலு பிரபாகரன், ஜெயதேவி என்ற நடிகையை காதலித்து அவருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். அந்த காலகட்டத்தில் சில்க் ஸ்மிதாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அதன் பின் சமீபத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஷிர்லி தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார். ஷிர்லி தாஸை திருமணம் செய்துகொண்டபோது வேலு பிரபாகரனுக்கு வயது 60. ஆதலால் இவரின் திருமணத்திற்கு பல சர்ச்சைகள் எழுந்தன. ஷிர்லி தாஸ், வேலு பிரபாகரன் இயக்கிய “காதல் கதை” என்ற திரைப்படத்தில் நடித்தவர்.

Advertising
Advertising

ஆடை இல்லாமல் நடிக்கனும்…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வேலு பிரபாகரன், ஷிர்லி தாஸை திருமணம் செய்துகொண்டதை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Velu Prabhakaran and Shirley Das

“நான் காதல் கதை திரைப்படத்தை இயக்கும்போது ஷிர்லி தாஸுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். நான் சொல்வது போல் நடிக்கவேண்டும், நான் ஆடை இல்லாமல் நடிக்க சொன்னால் கூட நடிக்க வேண்டும். நான் சொல்வதை போல் நடித்தால் நல்ல காசு தருகிறேன் என அவரிடம் கூறினேன். அந்த படம் தெலுங்கில் நன்றாக போனது. ஆனால் அந்த படத்தால் எனக்கு லாபம் வரவில்லை. ஆதலால் ஷிர்லிக்கு நான் சொன்னதை போல் பணம் கொடுக்கமுடியவில்லை.

அதன் பின் ஷிர்லி தாஸ் துபாயில் ஒரு வேலைக்கு சென்றுவிட்டார். ஒரு நாள் திரும்ப வந்து நாம் கல்யாணம் பண்ணிக்கலாம் என கூறினார். நம்மால் பணம்தான் தரமுடியவில்லை. இவர் இப்போது திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார். அது எனக்கு ஒரு கடமையாக பட்டது. நாம் பணிந்துதான் போகவேண்டும் என தோன்றியது. அதனால்தான் திருமணம் செய்துகொண்டேன்” என கூறினார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் பட பாடலை தொடர்ந்து 50 முறை கேட்ட சிவாஜி!.. என்ன முடிவெடுத்தார் தெரியுமா?..

Published by
Arun Prasad

Recent Posts