பேரரசு பேச்சுக்கு சரியான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!.. விடுதலை 2 அப்டேட்டையும் சொல்லிட்டாரு!..

வெற்றிமாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் வந்த பின்னர் தான் படங்களில் சாதிய பிரச்சனை அதிகமாக தலைதூக்கி இருப்பதாக நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் பேரரசு காட்டமாக பேசியதில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தளபதி விஜய்யை வைத்து திருப்பாச்சி மற்றும் சிவகாசி படங்களை இயக்கிய பேரரசு அடுத்த அஜித்தை வைத்து திருப்பதி, விஜயகாந்த்தை வைத்து தர்மபுரி, பரத்தை வைத்து பழனி, அர்ஜுனை வைத்து திருவண்ணாமலை என தொடர்ந்து ஊர் பெயர்களை வைத்து படமாக இயக்கி வந்தார். திருப்பாச்சி மற்றும் சிவகாசி படங்கள் ஓடிய அளவுக்கு பேரரசு இயக்கிய மற்ற எந்த ஒரு படமும் ஓடவில்லை.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருனு நினைச்சு என் ஸ்டார இழந்துட்டேன்! ரஜினி படத்தால் கெரியரை இழந்த நடிகை

தொடர்ந்து சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பேசி வரும் பேரரசு, கவுண்டம்பாளையம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டில் சாதிய பிரச்சனைகளே இல்லை என்றும் வெற்றிமாறன், பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் எடுத்து வரும் படங்களால் தான் அந்த பிரச்சனையை வருகிறது என பேரரசு பேசியுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன் இந்தியாவில் இன்றளவும் பல்வேறு மாநிலங்களில் பல இடங்களில் சாதிய பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. அதை இல்லை என்று பேசுபவர்கள் எந்த இடத்தில் வாழ்கின்றனர் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என பேசி பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடத்தும் அதிசயம்… ‘வாவ்’ இந்த வயதிலும் மிரட்டுகிறாரே ஆண்டவர்..!

மேலும், சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை 2 திரைப்படம் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு உள்ளதாகவும், அது முடிந்து விட்டால் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் என்கிற பெயரில் இயக்குனர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணையின் நடைபெற்றது. தற்போது விசாரணை முடிந்து அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படம் வெளியாகி இருக்கிறது. அது தொடர்பாக வேறு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறி சென்றார்.

இதையும் படிங்க:சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..

 

Related Articles

Next Story