More
Categories: Cinema News latest news

நானே அவன காபி அடிச்சிதான் படம் எடுக்க போறேன்.. –  உதவி இயக்குனர் கதையில் கை வைத்த வெற்றிமாறன்..!

தமிழில் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றி மாறன். தமிழில் குறைவான அளவில் திரைப்படங்கள் இயக்கி இருந்தாலும் கூட அவரது திரைப்படங்களுக்கு என தனி எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறார்.

தற்சமயம் விடுதலை என்கிற படத்தை இயக்கியுள்ளார். சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜாவின் இசையும் கூடுதல் பலமாக இருக்கிறது.

Advertising
Advertising

வெற்றிமாறன் வாடிவாசல் என்கிற நாவலை படமாக்குவதற்கான முயற்சியில் உள்ளார். தற்சமயம் அந்த படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராக உள்ளது. இந்த நிலையில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜ்குமார் என்பவரும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு கதையை வைத்திருந்தார்.

உதவி இயக்குனருக்கு ஒரு உதவி:

அதை சீரிஸாக எடுக்கலாம் என முடிவெடுத்தவர் ஆஹா என்னும் ஓ.டி.டி தளத்திடம் இதைப்பற்றி கேட்டுள்ளார். உடனே ஆஹா குழுமத்தை சேர்ந்தவர்கள், வெற்றிமாறன் கதையைதான் இவர் சீரிஸாக எடுக்க கொண்டு வந்துள்ளாரோ? எனப் பயந்து வெற்றிமாறனுக்கு போன் செய்துள்ளனர்.

வெற்றிமாறனிடம் விவரங்களை கூறியுள்ளனர். “ஆமாம் அவன் ரொம்ப நாளாக அதுப்பற்றி ஆய்வு பண்ணிட்டு இருக்கான். நான் அடுத்து எடுக்க போற படத்துக்கே, அவன் ஆய்வுகளில் இருந்துதான் செய்திகளை எடுக்கலாம்னு இருக்கேன். அதை வச்சிதான் வாடிவாசல் படத்தை இயக்கணும்” என வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.

அதன் பிறகுதான் ஆஹா தளம் அந்த கதையை ஏற்றுக்கொண்டது. சென்ற வருடம் பேட்டைக்காளி என்கிற பெயரில் அந்த சீரிஸ் வெளியானது.

Published by
Rajkumar

Recent Posts