Connect with us

Cinema News

வெற்றிமாறன் இவ்ளோ ஓட்டை கையா இருக்காரே!.. விடுதலை படம் அப்போ இத்தனை கோடி நஷ்டமா?.. அப்போ வாடிவாசல்!

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் தான் அதிகமாக தோல்வி படங்களையே கொடுக்காத இயக்குனர்கள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளதாக வெற்றிமாறன் சமீபத்தில் பேசிய பேட்டியில் இருந்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

காமெடி நடிகர் சூர்யா ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் சுமார் 4.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுவதாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த படத்திற்குள் சூரிக்கு போட்டியாக நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் உள்ளே நுழைந்தார்.

இதையும் படிங்க: ஞானவேல்ராஜாவுக்கு எதிராக திரும்பும் திரையுலகம் – சூர்யாவையே பின்னுக்குத் தள்ளிய அமீர்

இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன பட்ஜெட்டை விட 10 மடங்கிற்கும் மேல் அதிக பொருட்செலவில் அந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக கூறியிருப்பது ரசிகர்களை கலங்க வைக்கிறது இல்லையோ நிச்சயம் அந்த படத்தின் தயாரிப்பாளரை தலையில் துண்டு போட வைத்திருக்கும் என கூறுகின்றனர்.

4.5 கோடி ரூபாய் செலவில் படத்தை முடித்து கொடுக்கிறேன் என கூறிய வெற்றிமாறன் சுமார் 65 கோடி பட்ஜெட்டில் விடுதலை முதல் பாகத்தை எடுத்திருப்பதாக வெற்றிமாறன் செம கூலாக பேசியுள்ளார்.

இந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், வெறும் 40 கோடி ரூபாய் வசூல் தான் ஈட்டியதாக கூறப்படுகிறது. 65 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் வெறும் 40 கோடி ரூபாய் வசூல் மட்டுமே ஈட்டியதா? என்றும் அப்படிப் பார்த்தால் விடுதலை முதல் பாகம் மிகப்பெரிய தோல்வி படமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: புருஷனை வெறுப்பேற்ற கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிரபல நடிகை!.. எல்லாம் அந்த படம் பண்ண வேலை தானாம்!..

மேலும், ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்கத்தான் விடுதலை இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறதா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

விடுதலைப் படத்திற்கு இந்த நிலைமை என்றால் பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு இன்னமும் ஆரம்பிக்காமல் இருக்கும் வாடிவாசல் படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் செலவாகும் என்றும் அந்தப் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே பருத்திவீரன் பிரச்சனையில் அமீர் அதிகம் செலவு செய்து விட்டார் என்கிற குற்றச்சாட்டை தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முன் வைத்திருந்தார். தற்போது வெற்றிமாறன் அதைவிட அதிக செலவு செய்து இருக்கிறாரே என்ன பிரச்சனை ஓடிக் கொண்டு இருக்கிறதோ என்றும் கேட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top