More
Categories: Biggboss Tamil 7 latest news television

என்னை ரூமுக்கு அழைத்த டாப் நடிகர்… படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. விசித்ரா சொன்னது இவரை தானா?

Vichithra: தமிழ் சினிமாவில் கிளாமர் ரோலில் நிறைய படங்களில் நடித்திருந்தவர் விசித்ரா. இவர் திடீரென சினிமாவை விட்டே விலகினார். சில காலம் முன்னர் சின்னத்திரையில் எண்ட்ரியாகி குக் வித் கோமாளி மூலம் அடுத்த ரவுண்ட் பாப்புலாரிட்டியை பெற்றார்.

அடுத்து பிக்பாஸ் தமிழ் சீசனில் கலந்து கொள்ள இவர் முதல் வாரங்களிலே வெளியேறுவார் என எண்ணப்பட்டது. ஆனால் வனிதா மகள் ஜோவிகாவின் கல்வி குறித்து பேசி வைரலாகினார். தொடர்ந்து ப்ரதீப் வெளியேற்றத்தில் புல்லி கேங்கிற்கு எதிராக நின்றார். இதனால் அவரின் வாக்கு வங்கி அதிகரித்தது.

இதையும் படிங்க: கலாநிதிமாறன் கொடுத்த கிஃப்ட் இருக்கட்டும்!. விஜய் கிஃப்ட் கொடுத்த 5 பிரபலங்கள் யார் தெரியுமா?!..

கடந்த சில வாரங்களாகவே வோட்டிங்கில் முன்னணியில் இருக்கிறார். இதனால் பைனலிஸ்ட்டாக கூட விசித்ரா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று போட்டியாளர்கள் தங்கள் மறக்கவே முடியாத சம்பவம் குறித்து பேசும் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பேசிய விசித்ரா, முன்னணி நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அப்போது ஷூட்டிங்கில் அவரை பார்த்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் என் பெயரை கூட கேட்காமல் ரூமுக்கு வர சொன்னார். 

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தும் நான் கண்டுக்கொள்ளாமல் இரவு என் ரூமை பூட்டி விட்டு உறங்கினேன். இதில் கடுப்பான அந்த நடிகர் அவர் ஆட்களை வைத்து இரவு முழுவதும் என் ரூமை தட்ட வைத்தார். அப்போ என் கணவர் அந்த ஹோட்டலில் மேனேஜராக இருந்தார். 

அவர் தான் என்னை காத்தார். ஒவ்வொரு நாளும் ஒரு ரூம் கொடுப்பார். அப்படி ஒருநாள் அந்த ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சி எடுத்தார்கள். ஆனால் அங்கிருந்த சண்டை கலைஞர் என்னை தவறான முறையில் தொட்டார். இதை மாஸ்டரிடம் சொன்னபோது அவர் என்னை அறைந்து விட்டார்.

இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் மிஷ்கின் – விஜய் சேதுபதி படம்!.. வில்லனாக களமிறங்கும் தளபதி68 பட நடிகர்…

எங்க யூனியனில் இது குறித்து புகார் கொடுத்த போது அவர்களும் இதை விட்டு வேற வேலையை போய் பாரும்மா என்றார்கள். ஒருவர் கூட என்னுடன் நிற்கவில்லை. இதனால் தான் நடிப்பில் இருந்து வெளியேறினேன் என்றார். இந்நிலையில் அந்த நடிகர் பாலகிருஷ்ணா தான் என சிலர் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். 

தெலுங்கில் வெளியான பாலவடிவி பாசு படத்தில் தான் இது நடந்து இருக்கலாம். அந்த ஸ்டண்ட் மாஸ்டர் அ. விஜய் என்றும், புகாரை எடுக்க மறுத்த சங்க தலைவர் ராதா ரவி என்றும் கூறப்படுகிறது. தற்போது ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக இதை ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts