எல்லாம் ஓகே! ரெண்டு மாசம்தான் - அடிச்சு தூள் கிளப்பப் போறாரு! ‘விடாமுயற்சி’க்கு கிடைத்த வெற்றி

எந்த நேரத்தில் படத்தை அறிவித்தார்களோ இன்று வரை விடாமுயற்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது. இன்னும் ஒரு அதிகாரப்பூர்வ தகவல் கூட வெளியிடவில்லை. தலைப்பை அறிவித்ததோடு சரி. அதன் பிறகு எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய கதையாக இருக்கிறது.

ஆனால் இதோ படப்பிடிப்பு தொடங்குகிறது, அதோ தொடங்குகிறது என்றெல்லாம் பேச்சுதான் வருகிறதே தவிர செயலில் இறங்கிய மாதிரி இல்லை. நாள்தோறும் எதாவது ஒரு மாற்றத்துடன் சிக்கலில்தான் தவித்து வருகிறார்கள்.

இயக்குனரை பார்த்து பரிதாப படவா? இல்லை தயாரிப்பாளர் தரப்பில் எதுவும் பிரச்சினை இருக்கிறதா? இல்லை அஜித் தரப்பில் எதுவும் தாமதம் ஏற்படுகிறதா என்று ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

இதையும் படிங்க : கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பிரபல இயக்குனர்… கடுப்பாகி ஆப்பு வைத்த உலக நாயகன்…

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் கண்டிப்பாக படப்பிடிப்பு தொடங்கும் என செய்திகள் வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதையும் லண்டனில் எடுக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் லண்டனில் இல்லையாம். ஹாங்காங் என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு செய்தி கிடைத்தது. ஆனால் எல்லாவற்றையும் தவிர்த்து படப்பிடிப்பு முழுவதும் துபாயில் நடத்ததான் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதற்காக அஜித் துபாயில் தான் இருக்கிறாராம். அதுவும் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து விடாமல் இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பை ஒரே மூச்சில் முடிக்கவும் தயாராக இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: நல்ல மனுஷனை கேவலப்படுத்தியதே சோஷியல் மீடியா தான்.. விஜயகாந்த் சாமி மாதிரி தெரியுமா? புல்லரிக்க வைக்கும் எழுத்தாளர்!

அப்படி மட்டும் நடந்தால் லியோ பட ரிலீஸ் பிறகு அஜித் சும்மா கெத்தா வந்து நிற்பார் என்று ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வாரிசு , துணிவு என அடுத்தடுத்து விருந்தை ருசித்த ரசிகர்களை அஜித் ஏமாற்ற மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதியில் விடாமுயற்சி ரசிகர்களை மகிழ்விக்கும் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

 

Related Articles

Next Story