Categories: latest news

விவாகரத்துக்கு பிறகு முதன்முதலாக வீடியோ வெளியிட்ட ஏ.ஆர் ரகுமான்!.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?!…

விவாகரத்துக்கு பிறகு ஏ.ஆர் ரகுமான் முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

இந்திய சினிமா ரசிகர்களால் இசைப்புயல் என்று அழைக்கப்பட்டு வருபவர் ஏ ஆர் ரகுமான். சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இவர் தற்போது வரை எந்த ஒரு கிசுகிசுக்களிலும் சிக்காத ஒரு மனிதர். கடந்த சில நாட்களாக இவரின் பேச்சு தான் சமூக வலைதள பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அவரது மனைவி சாய்ரா வெளியிட்ட விவாகரத்து பதிவுதான்.

இதையும் படிங்க: ‘வேதம் புதிது’ படத்தில் இருந்த சென்சார் பிரச்சினை.. நான் ஆணையிட்டால் ரேஞ்சுக்கு மாஸ் காட்டிய எம்ஜிஆர்

இருவரும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருக்கிறார்கள். இந்த செய்தி அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த மனவேதனைக்கு ஆறுதல் தரும் வகையில் புதிய விருது ஒன்று ஏ ஆர் ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு பேன் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கோட் லைஃப்.

பிருத்விராஜ்  நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாலைவனத்தில் நடப்பதை போன்று, வசனங்கள் குறைவாக படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசை மிகப்பெரிய உயிரோட்டத்தை கொடுத்திருந்தது. இப்படம் உலக சினிமாக்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த ‘பெரியோனே ரஹ்மானே’ என்ற பாடல் பலரையும் உருக வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசை உலக அரங்கில் பல விருதுகளை வெல்லும் என்று பல சினிமா விமர்சனங்கள் கூறியிருந்தார்கள். அந்த வகையில் ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது சார்பாக ஆடு ஜீவிதம் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டு படங்களின் பிரிவில் இப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த பலரும் ஏ ஆர் ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்திருந்த இந்த நேரத்தில் இப்படி ஒரு விருது வந்திருப்பது அவருக்கு சற்று மன ஆறுதலை கொடுக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தார்கள்.

இதையும் படிங்க: AR.Rahman: மூத்த மகளிடம் ஏ.ஆர்.ரகுமான் சொன்ன வார்த்தை… அவரைப் போய் தப்பா பேசுறாங்களே..!

அந்த வகையில் இந்த விருதினை அப்படத்தின் இயக்குனர் அந்த நிகழ்ச்சிக்கு சென்று வாங்கியிருந்தார். இதை தொடர்ந்து ஏஆர் ரகுமான் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ‘இந்த விருதினை பெறுவதில் நான் மிகப் பெருமை அடைகிறேன்.

அதுவும் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக இந்த விருது எனக்கு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதுக்கு நன்றி. மேலும் என் ரசிகர்களுக்கு இந்த சமயத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago