விஜய் பட வில்லனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எஸ்.கே!.. செம டெரரா இருக்காரே!.. வீடியோ பாருங்க!...

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர். விஜய், அஜித், விஜயகாந்த் ஆகியோரை வைத்து திரைப்படங்களை இயக்கியவர். முன்னணி நடிகர்கள் இவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டதெல்லாம் நடந்தது.

ஆனால், கத்தி திரைப்படத்திற்கு பின் அவர் இயக்கிய ஸ்பைடர், ரஜினியை வைத்து அவர் இயக்கிய தர்பார் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. எனவே, கடந்த 3 வருடங்களாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை. தர்பார் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார்.

இதையும் படிங்க: விஜயின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இவரா..? நம்பவே முடியலயே… காண்பது கனவா இல்லை நனவா..?!

ஆனால், அவரின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரின் சம்பளத்தை குறைத்ததால் அப்படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின்னர்தான் அந்த பிராஜெக்டில் நெல்சன் வந்து பீஸ்ட் படம் உருவானது. 3 வருடங்களுக்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு பட வேலையை துவங்கினார் முருகதாஸ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஹிந்தியில் சல்மான்கானை வைத்து ஒரு படத்தை அவர் இயக்குவதும் உறுதியானது. சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் அமரன் படத்திலும், ஒரு பக்கம் முருகதாஸ் இயக்கத்திலும் நடித்து வந்தார். அமரன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கிடைக்கிறதே குதிரைக்கொம்பு… அதுல வேற இப்படியா பண்ணுவீங்க…? முருகதாஸை டார்ச்சர் பண்ணிய அசின்..!

இந்நிலையில், இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வல் வில்லனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்போது சென்னை துறைமுகத்தில் சில கோடி செலவில் ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், வித்யூத் கலந்து கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் கேரவானிலிருந்து வித்யூத் கீழே இறங்கி ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும், அவருக்கு முருகதாஸ் காட்சியை விளக்கி சொல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. வித்யூத் சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story