Connect with us

Cinema News

நீ யாரு.? என்ன பண்ணிட்டு இருக்க.?! தளபதி விஜயை மன வருத்தப்பட வைத்த அந்த நடிகர்…

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் என்றாலே நம் நினைவுக்கு வரும் ஒரே நடிகர் மாஸ்டர் மகேந்திரன் மட்டும் தான். அதுவும் நாட்டாமை திரைப்படத்தில் பேசும் அந்த வசனம் தற்போது வரை பிரபலம். அந்த வசனம் அவரை அடையாளம் கண்டு கொள்ள வைத்து விடும்.

அதன் பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு விழா, நாடோடி கனவு, திட்டுவாசல் போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் அது எதுவும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அப்படி இருந்தவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அதுதான் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தான்.

இதையும் படியுங்களேன் – என்னமா.. இப்படி பண்றீங்களேமா.?! ‘அந்த’ வார்த்தை சொல்லி மொத்த பேரையும் திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்.! 

அண்மையில் ஒரு நேர்காணலில் தனது திரைப்பயணம் குறித்து பேசினார் மகேந்திரன். அவர் கூறுகையில் தளபதி விஜய் பற்றி மிகவும் பெருமையாக பேசினார். அதாவது, ‘ ஒருநாள் வேறு எதோ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சார் என்னை பார்த்துவிட்டார். அங்கு தான் அவரும் ஷூட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மிகவும் டயர்டாக இருந்தார். இருந்தும் எனனை அழைத்தார்.

இதையும் படியுங்களேன்  – உங்கள தொட்டால் நான் வருவேன்… கம்பீரமாய் துணை நின்ற விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன சினிமா பிரபலம்.!

டேய் என ஒரு குரல், அண்ணா என நானும் திரும்பி பார்த்துட்டேன். உடனே, கேரவன் அழைத்து கொண்டு போய் 4 மணிநேரம் பேசினார். அவர் என்னிடம்,’ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க.?’ என கேட்டார். நான், ‘ படம் வருது, தயாரிப்பாளர்கள் வராங்க அப்படியே போகுதுன்னா.’ என கூறஅவர்,  ‘ நீ யாருனு தெரியுமா.? மாஸ்டர் மகேந்திரன் என்ன செஞ்சிட்டு இருந்தானு தெரியுமா.? இப்போ நீ என்னடா பண்ணிட்டு இருக்க.? ‘ என என்னிடம் அவ்வளவு அக்கறையாக பேசினார். என தளபதியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மாஸ்டர் மகேந்திரன் தளபதி விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தில் அவர்க்கு தம்பியாக நடித்து இருப்பார். அவருடைய திறமை வளர்ச்சி வீணாய் போகுதே என மன வருத்தத்தில் அவரிடம் இவ்வாறு பேசியுள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top