Connect with us

Cinema History

படம் எடுக்கணும்னு நினைச்சதுக்கு நல்லா பண்ணிட்டாங்க!.. வழக்குகளில் சிக்கிய விஜய் ஆண்டனி…

தமிழ் சினிமாவில் பெரிதாக ரசிக வட்டாரம் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் சற்று பிரபலமாக இருக்கும் நடிகர்களில் விஜய் ஆண்டனி முக்கியமானவர். விஜய் ஆண்டனி படத்தை பார்க்க மக்கள் விருப்பம் காட்டும் அளவிற்கு அவரது திரைப்படங்கள் சுவாரஸ்யமாக இருந்து விடுகின்றன.

இசையமைப்பாளராக இருந்ததை விடவும் ஒரு நடிகராக அதிகம் சம்பாதிக்கிறார் விஜய் ஆண்டனி என அவரை குறித்து ஒரு பேச்சு இருந்து வருகிறது. நான், பிச்சைக்காரன், போன்ற படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள்.

vijay antony

இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியுள்ளார். பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் முடித்த உடனேயே அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான யோசனை அவருக்கு வந்துள்ளது.

அதற்கான கதையையும் விஜய் ஆண்டனியே எழுதிவிட்டார். பிச்சைக்காரன் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சசியை வைத்தே இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டார் விஜய் ஆண்டனி. ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் விஜய் ஆண்டனியே இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

மூளையை சிகிச்சை மூலம் மாற்றி வைப்பதால் நிகழும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கதை நாங்கள் எழுதியது என பலரும் அவரது கதையின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இதுக்குறித்து பேட்டியில் பேசிய விஜய் ஆண்டனி. மூளை மாற்று சிகிச்சை தொடர்பாக உலகம் முழுதும் 200க்கும் அதிகமான படங்கள் வந்துள்ளன. அது ஒரு கான்செப்ட். அதற்கெல்லாம் வழக்கு போட முடியாது. என விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திருமண வரவேற்பில் மணிவண்ணன் அணிந்திருந்த கோர்ட் சூட்!.. யாருடையது தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema History

To Top