நிஜ வாழ்விலும் நண்பன் பட பாணியை கடைபிடித்த விஜய்… அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?…

Published on: September 27, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவின் இளைய தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரிய வெற்றியை காணாத விஜய் பின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்தார்.

பின் கில்லி, திருமலை போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். இவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவரும் இயக்குனர் ஆவார். தனது தந்தையின் முயற்சியினால்தான் விஜய் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையும் படிங்க:குட்டிக்கதையை விட இமேஜ் தான் முக்கியம்… கோபம் குறையாத மனைவி சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டம் தான்!

மேலும் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், சர்கார் போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். இவர் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரவுள்ள திரைப்படம்தான் லியோ. இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரஜினிக்கு கொடுக்கத் தெரிஞ்ச பாதுகாப்பை விஜய்க்கு ஏன் கொடுக்க முடியல? தம்பி வருவான் – தோள்கொடுத்த சீமான்

இது ஒருபுறமிருக்க விஜயின் கல்லூரிகால பேராசிரியர் தனது கல்லூரியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ஒரு முறை கல்லூரியில் காமர்ஸ் பேராசிரியர் தனது வகுப்பிற்குள் நுழைந்தபொழுது அந்த வகுப்பில் விஜய் அமர்ந்துள்ளார். அவரிடம் சென்று ‘தம்பி நீ படிப்பது விஸ்காம். ஆனால் இதுவோ காமர்ஸ் வகுப்பு. இங்கு என்ன செய்கிறாய்?’ என பேராசிரியர் கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் தனது நண்பன் வினோத்தை பார்க்க வந்ததாக கூறியுள்ளார். பின் பேராசிரியர் ‘நீ என் வகுப்பு இல்லை தம்பி.. வெளியே செல்லுங்கள்’ என கூறியுள்ளார். விஜயும் அமைதியாக கிளம்பி சென்றுவிட்டாராம். இதனை அந்த கல்லூரியின் பேராசிரியர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நண்பன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்காக விஜய் பள்ளி முதல் கல்லூரி வரை படித்து பட்டம் வாங்கி கொடுப்பார். ஆனால் நிஜ வாழ்விலும் இவ்வாறு நடந்திருப்பது வேடிக்கையாகதான் உள்ளது.

இதையும் படிங்க:ரசிகர்களின் காயத்துக்கு மருந்து போட தயாரான விஜய்!.. லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போ வருது தெரியுமா?..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.